إعدادات العرض
அல்லாஹ்வே! என்னை மன்னித்து என் மீது அருள் புரிவாயாக.மேலும் என்னை மேலான தோழர்களின் பால் சேர்த்து வைப்பாயாக.
அல்லாஹ்வே! என்னை மன்னித்து என் மீது அருள் புரிவாயாக.மேலும் என்னை மேலான தோழர்களின் பால் சேர்த்து வைப்பாயாக.
ரஸூல்(ஸல்) அவர்கள் என் மீது சாய்ந்திருந்தவாறு "அல்லாஹ்வே! என்னை மன்னித்து என் மீது அருள் புரிவாயாக.மேலும் என்னை மேலிடத்து தோழர்களின் பால் சேர்த்து வைப்பாயாக" என்று கூறுவதை நான் செவிமடுத்தேன். என்று ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
الترجمة
عربي বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහල ئۇيغۇرچە Hausaالشرح
ரஸுல் (ஸல்) அவர்களின் ஆயுற் கால முடிவு நெருங்கி வந்த போது அன்னார் உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரழி) அவர்களின் மேல் சாய்ந்து கொண்டு தங்களை மேலிடத்து நண்பர்களான நபிமார்கள், ஸித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களின் பால் சேர்த்து வைக்குமாறு தங்களின் இறைவனிடம் வேண்டினார்கள்