உனக்கு என்ன நேர்ந்து விட்டது? நீ உனது தோழனின் கழுத்தை அறுத்துவிட்டாய்

உனக்கு என்ன நேர்ந்து விட்டது? நீ உனது தோழனின் கழுத்தை அறுத்துவிட்டாய்

அபீ பக்ரா ரழியல்லாஹுஅன்ஹூ அறிவிக்கிறார்கள் ஒரு மனிதர் பற்றி நபி ஸல் அவா்களிடம் பிரஸ்தாபிக்கப்பட்டது அவ்வேலைஅவரை அங்கிருந்த ஒரு மனிதர் பாராட்டிப் பேசினார். அப்போது நபி ஸல் அவர்கள் உனக்கு என்ன நேர்ந்து விட்டது நீ உனது நண்பரின் கழுத்தை துண்டித்து விட்டாய் என பலதடவைகள் கூறி விட்டு நீங்கள் உண்மையில் உங்களில் ஒருவரை புகழ, பாராட்ட விரும்பினால் நான் அவரை குறித்து இன்னது நினைக்கிறேன் என்று கூறட்டும். அவர் கருதியது அவ்வாறு இருந்தால் அவரை அவ்விடயம் பற்றி விசாரிக்க அல்லாஹ் போதுமானவன். அத்துடன் அல்லாஹ்வை விடவும் எவரையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதிஸில் இறை தூதரின் வழிகாட்டள்கள் பல காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று முஸ்லிமை பொருத்த வரை ஒருவரை புகழ்வதில்,பாராட்டுவதில் எல்லை மீறி செயற்படுவதிலிருந்து தூர விலகியிருக்க வேண்டும். பிரமை மற்றும் தற்பெருமை ஷைத்தான் நுழைவாயில்களாகும், அவ்வாறு புகழ்வது புகழப்பட்டவரை பெருமையிலும்,பிரமையிலும் மூழ்கடித்து அவரை அழித்து விடும். எனவே ஒரு முஸ்லிம் பிறரைப் பாராட்டுவதிலும் புகழ்வதிலும் நடு நிலமையைக் கடைப்பிடித்து மனிதர்களின் மறைவான விடயங்களை அல்லாஹ்விடமே பொறுப்புச்சாட்டிட வேண்டும்.

التصنيفات

தடைசெய்யப்பட்ட வார்த்தைகளும் நாவின் விபரீதங்களும்