நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதரில் மேலானவர் அவர்களில் முதலில் ஸலாம் கூறியவரே.

நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதரில் மேலானவர் அவர்களில் முதலில் ஸலாம் கூறியவரே.

நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதரில் மேலானவர் அவர்களில் முதலில் ஸலாம் கூறுகின்றவரே.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் திர்மிதியின் ஒரு அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதரே! இரண்டு மனிதர்கள் சந்திக்கும் போது யார் முதலில் ஸலாம் சொல்ல வேண்டும்? என வினவப்பட்டது.அதற்கு நபியவர்கள் அவர்களில் முதலில் ஸலாம் சொல்கின்றவரே அல்லாஹ்விடத்தில் மிகவும் மேலானவர்.என்று கூறினார்கள்.என பதிவாகியள்ளது.

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

அல்லாஹ்வுக்கு வழிப்படும் விடயத்தில் அவனுக்கு மிகவும் நெருக்கமான மனிதன் தன் சகோதரனுக்கு ஸலாம் சொல்லும் விடயத்தில் முந்திக் கொள்கின்றவனே. ஏனெனில் அவன் அல்லாஹ்விடமிருந்து நன்மையை ஈட்டிக் கொள்ளும் ஆசையில் அல்லாஹ்வுக்கு வழிப்படும் விடயத்தில் தீவிரம் காட்டி அதன் பக்கம் விரைந்து செல்கிறான்.ஆகையால் அல்லாஹ்விடத்தில் அவன் மனிதரில் மேலானவனாகவும்,உயர்ந்த பக்தனாகவும் ஆகிவிடுகிறான்.என்பது இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.

التصنيفات

நல்லமல்களின் சிறப்புகள், ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்