إعدادات العرض
'மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்;
'மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்;
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ருகையா தமீம் பின் அவ்ஸ் அத்தாரீ ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்;.' என்று நபியவர்கள் கூறியபோது, யாருக்கு நலன் நாட வேண்டும்? என நாம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்: அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்திற்கும், அவனது தூதரிற்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், இன்னும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் நலன் நாடுவதாகும்' எனக் கூறினார்கள்.
الترجمة
العربية Español አማርኛ English اردو Indonesia বাংলা Français Türkçe Русский Bosanski සිංහල हिन्दी 中文 فارسی Tiếng Việt Tagalog Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ ไทย Deutsch پښتو অসমীয়া Shqip Nederlands ગુજરાતી Кыргызча नेपाली Yorùbá Lietuvių دری Српски тоҷикӣ Kinyarwanda Română Magyar Čeština Moore Malagasy Fulfulde Italiano Oromoo ಕನ್ನಡ Wolof Azərbaycan O‘zbek Українська ქართული Македонски ភាសាខ្មែរ Bambara ਪੰਜਾਬੀ मराठी Kirundi Kurmancî Bahasa Melayu Yaoالشرح
இந்த மார்க்கம் உளத் தூய்மை மற்றும் உண்மை ஆகிய பண்புகளை அடித்தளமாகக் கொண்டமைக் கப்பட்டுள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் மார்க்கத்தில் உள்ளவற்றை அவன் கடமையாக்கியது போன்று எவ்விதக் குறைத்தலோ மோசடியோ செய்யாது பூரணமாக நிறைவேற்ற வேண்டும். பின் 'நலன் நாடுதல்' யாருக்கு இருக்க வேண்டும் என அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் : முதலாவது: அல்லாஹ்வுக்கு நலன் நாடுதல் என்பது அவனுக்கு இணைவைக்காது உளத்தூய்மையுடன் செயற்படுதலாகும். அதாவது தவ்ஹீதின் வகைகளான ருபூபிய்யாவிலும்,(இரட்சித்து பரிபாலித்தலில் அவனை ஒருமைப்படுத்துதல்) உலூஹிய்யாவிலும், (அல்லாஹ்வுக்குரிய வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துதல்) அஸ்மா வஸ்ஸிபாத்திலும் (அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துதல்) தனித்துவமானவன் என்று நாம் ஈமான் கொள்ள வேண்டும். அத்துடன் அவனின் கட்டளைகளை மதித்து நடப்பதுடன் அவனை ஈமான் கொள்வதின் பால் பிறரையும் அழைத்தல் ஆகிய விடயங்களை இது குறிக்கும் . இரண்;டாவது : அவனின் வேதமான அல்குர்ஆனுக்கு நலன் நாடுதல் என்பது அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்றும், அவனின் இறுதி வேதம் என்றும், அல்குர்ஆனுக்கு முன்னுள்ள அனைத்து இறை சட்ட திட்டங்களையும் மாற்றிய வேதம் என்றும் நம்ப வேண்டும். அத்துடன் அதனை மகிமைப் படுத்துவதுடன், உரிய முறையில் ஓதி அதன் முஹ்கமான (தெளிவான ஒரே கருத்தைக் காட்டும்) வசனங்களை நடைமுறைப் படுத்துவதுடன், முதஷாபிஹான (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) வசனங்களை ஓப்புக்கொள்ள வேண்டும். அதற்கு தவறான பொருள்கோடல் செய்வோரின் வியாக்கியானத்தை விட்டும் அதனைப் பாதுகாப்பதுடன், அதன் உபதேசங்களினால் படிப்பினை பெறுதல் வேண்டும். மேலும் அதன் அறிவை பரப்புவதுடன் அதன் போதனையை நோக்கி மக்களை அழைக்கவும் வேண்டும். இவைகளே அல்குர்ஆனுக்கு நலன் நாடுதல் என்பது குறிக்கிறது. மூன்றாவது : அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நலன் நாடுதல் என்பதன் கருத்து : நாம் அவர்களை தூதர்களில் இறுதியானவர் என்று நம்பிக்கை கொள்வதுடன், அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த அத்துனை விடயங்களையும் உண்மைப்படுத்துவதுடன், அவர்களின் ஏவல்களை எடுத்து நடப்பதன் மூலம் கட்டுப்பட்டும், அவர்களின் விலக்கல்களை தவிர்ந்தும் நடத்தல் வேண்டும். மேலும் அவர்கள் கொண்டுவந்த வழிமுறையின் அடிப்படையிலேயே அல்லாஹ்வை வணங்குதல் வேண்டும். அத்துடன் அவர்களுக்குரிய உரிமையை பேணி நடப்பதுடன், அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களின் பிரச்சாரத்தையும், அவர் கொண்டு வந்த மார்க்கத்தையும் பரப்புவதுடன், அவருக்கெதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை மறுத்திடுதல் வேண்டும். நான்காவது : முஸ்லிம்களின் தலைவருக்கு நலன் நாடுதல் என்பது சத்தியத்தில் அவர்களுக்கு ஒத்துழைத்தல், அவர்களின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்யாதிருத்தல், அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் விடயத்தில் அவர்களின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து கட்டுப்பட்டு நடப்பதையும் குறிக்கிறது. ஐந்தாவது: முஸ்லிம்களுக்கு நலன் நாடுதல் என்பது அவர்களுக்கு உபகாரம் செய்வதும் அவர்களை நல்ல காரியங்களின் பால் அழைப்பதும் அவர்களுக்கு பிறரால் ஏற்படும் ஆபத்துக்களை தடுப்பதும் அவர்களுக்கு நன்மையை விரும்புவதும், தக்வா மற்றும் நன்மையான காரியங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பதையும் இது குறிக்கிறது.فوائد الحديث
அனைவருக்கும் நலன் நாடுதல் வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளமை.
மார்க்கத்தில் நலவை நாடுதலுக்குள்ள பாரிய இடம் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை.
மார்க்கமானது நம்பிக்கைகள் சொல், செயல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளமை.
யாருக்கு நலன் நாடுகிறோமோ அவருக்கு நன்மையே நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொள்வதும், நலன் நாடுபவருக்கு துரோகம் செய்தல் என்ற தீய குணத்திலிருந்து உள்ளம் தூய்மைபெற்றிருப்பதும் நலன் நாடலில் உள்ள விடயங்களில் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்களின் அழகான கற்பித்தல் முறையை இங்கு அவதானிக்கலாம். ஒன்றைப் பொதுவாகக் கூறி விட்டு, பின்னர் அதனை விரிவாகக் கூறுகின்றார்கள்.
மிக முக்கியமானதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். நபியவர்கள் முதலில் அல்லாஹ்வுக்கு நலவை நாடுவதைக் கூறிவிட்டு, அதன்பின் அல்குர்ஆன், அதன்பின் நபி (ஸல்) அவர்கள், அதன்பின் முஸ்லிம் தலைமைகள், அதன்பின் முஸ்லிம் பொதுமக்கள் என வரிசையாகக் கூறியுள்ளார்கள்.
