إعدادات العرض
நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்பக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார்.…
நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்பக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான், மிகைக்குறைந்த தண்டனை உரியவர்
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அந்நுஃமான் பின் பஷீர் (ரலி) ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்பக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான், மிகைக்குறைந்த தண்டனை உரியவர்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Kurdî Kiswahili Português සිංහල Nederlands Tiếng Việt অসমীয়া ગુજરાતી پښتو Hausa മലയാളം नेपाली Magyar ქართული తెలుగు Македонски Svenska Moore Română Українська ไทย मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Wolof ភាសាខ្មែរ ಕನ್ನಡ Српски Malagasy Kinyarwanda Shqipالشرح
இங்கு நபி (ஸல்) அவர்கள், நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்புக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் உஷ்ணத்தின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். உடல், உடல், உள வேதனைகள் ஒருசேர இருப்பதால், அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான் மிகைக்குறைந்த தண்டனை உரியவர் என்று கூறுகின்றார்கள்.فوائد الحديث
நரகத்தின் இந்தப் பயங்கரமான தண்டனையை பாவிகள் மற்றும் நிராகரிப்பாளர்களுக்கு எச்சரித்து, அதற்கு இட்டுச் செல்லும் காரணிகளைத் தவிர்க்கத் தூண்டுதல்.
தமது கெட்ட செயற்கள் மூலம் நரகம் நுழைபவர்கள் வெவ்வேறான தரங்களில் இருப்பார்கள்.
நரக வேதனையின் கடுமை. அல்லாஹ் எங்களை அதிலிருந்து பாதுகாப்பானாக.
التصنيفات
சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்