إعدادات العرض
'போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'
'போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'
தனது தந்தை அபூமூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் அபூபுர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் அவரை (அபூ மூஸா அல் அஷ்அரியை) யமன் நாட்டுக்குப் அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் குறித்து) நபியவர்களிடம் கேட்க, அவை எவை? எனக் கேட்டார்கள்: அதற்கு அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவரகள்; 'அல்பித்உ, அல்மிஸ்ர்' என்றார்கள்.அப்போது அபூ புர்தாவிடம் அல்பித்உ என்றால் என்ன? எனக் கேட்க்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் என்றார்கள், அல்மிஸ்ர் என்பது தொலி நீக்கப்படாத வாற்கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்' என்று பதிலளித்தார்கள். இமாம் முஸ்லிம் அவர்கள் பின்வருமாறு பதிவு செயதுள்ளார்கள், அதன் வாசகம் பின்வருமாறு: நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்த போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து ஒருவகை பானம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு 'அல்மிஸ்ர்' என்று பெயர் சொல்லப்படுகிறது. மேலும், தேனிலிருந்து 'பித்உ' எனப்படும் ஒரு பானமும் தயாரிக்கப் படுகிறது. (அவற்றை நாங்கள் அருந்தலாமா?)' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்' என்று கூறினார்கள். முஸ்லிமின் இன்னோர் அறிவிப்பில் : தொழுகையை விட்டும் தடுக்கக்கூடிய போதைகள் அனைத்தும் ஹராமாகும் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. முஸ்லிமின் இன்னோர் அறிவிப்பில் : 'நபியவர்கள் 'ஜவாமிஉல் கலிம்' எனும் ஆரம்பம் முதல் இறுதிவரை சொற்சுருக்கமும் பொருட்செரிவும் மிக்க வார்தைகளை பேசும் திறமை வழங்ப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் கூறினார்கள் : தொழுகையிலிருந்து தடுக்கக்கூடிய போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்'.
الترجمة
العربية Español አማርኛ English اردو Indonesia বাংলা Français Türkçe Русский Bosanski සිංහල हिन्दी 中文 فارسی Tiếng Việt Tagalog Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ ไทย Deutsch پښتو অসমীয়া Shqip Nederlands ગુજરાતી Кыргызча नेपाली Lietuvių دری Српски тоҷикӣ Kinyarwanda Magyar Čeština Moore Malagasy Oromoo ಕನ್ನಡ Wolof Azərbaycan O‘zbek Українська ქართული Македонски ភាសាខ្មែរ Bambara ਪੰਜਾਬੀ मराठी Kirundi Kurmancî Bahasa Melayuالشرح
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை யமனுக்கு அனுப்பினார்கள் என அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அங்கே சில பானங்கள் தயாரிக்கப்படுவதாகுவும், அதை அருந்துவது தடைசெய்யப்பட்டதா என நபியவர்களிடத்தில் வினவ நபியவர்கள் அந்த பானம் பற்றி விவரிக்குமாறு அவரை வேண்டிக் கொண்டார்கள். அப்போது அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கே ';பித்உ' மற்றும் 'மிஸ்ர்'; எனும் இரண்டு வகையான பானங்கள்; உண்டு. பித்ஃ என்பது தேனினால் தயாரிக்கப்படும் மதுசாரம், மிஸ்ர் என்பது வாற்கோதுமையினால் தயாரிக்கப்படும் மதுசாரம் என்று கூறினார்கள். உடனே சொற்சுருக்கமும் பொருட்செரிவும் வழங்கப்பட்ட நபியவர்கள் : போதை தரும் அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும் என்று மிகவும் சுருக்கமாக பதிலளித்தார்கள்.فوائد الحديث
ஈச்சம் பழம் அல்லது தேன் அல்லது வாற்கோதுமை இட்டு ஊரவைக்கும் நீர் அந்நபீத் ' எனப்படும். இவ்வாறு ஊரவைத்த நீர் சுவையும் இனிப்பும் நிறைந்ததாக மாறிவிடுகிறது. அதன் பின் அது மதுசாரமாக மாறி போதை தரக்கூடிய ஒரு பானமாக மாறிவிடுகிறது.
இந்த ஹதீஸ் மதூபானம் மற்றும் ஹஷீஷ் போன்ற போதையை ஏற்படுத்தக்கூடிய அனைத்து வகையான போதைப்பொருள்களும் ஹராம் என்பதற்கான சட்டவாக்க அடிப்டை விதி ஒன்றை உள்ளடக்கியுள்ளது.
ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையான விடயங்களை பற்றி அறிந்து கொள்ள கேள்வி கேட்பதன் அவசியம்.
ஆரம்பத்தில் மதுபானம் தொழுகை நேரத்தில் தடைசெய்யப்பட்டது. சில முஹாஜிரீன்கள் மது குடித்துவிட்டு தொழுகையில் ஈடுபட்டபோது தமது தொழுகையில் அல்குர்ஆனை தடுமாற்றத்துடன் பிழையாக ஓதினர். அவ்வேளை அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்குவதன் ஊடாக தொழுகை நேரத்தில் மதுஅருந்துவதை தடைசெய்தான். அந்த வசனம் பின்வருமாறுமாறு : 'ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு நீங்கள் போதையுடையவர்களாக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்.' இந்த வசனம் இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் அவர்களின்; அழைப்பாளர் 'போதையுடன் தொழுகையை நெருங்க வேண்டாம்' என்று மக்களை அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து அல்லாஹ் மதுவை முற்றாக பின்வரும் வசனத்தின் மூலமாக தடைசெய்தான் ' அல்லாஹ் கூறினான் : ''ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி பார்ப்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?'
பெரும் பாதிப்பும் ஆரோக்கிய கேடும் மதுபானத்தில் காணப்படுவதால் அல்லாஹ் மதுவை தடைசெய்துள்ளான்.
போதை ஏற்படுத்தல் என்ற பண்பு காணப்படுவது ஒரு பொருள் ஹராமாக்கப்படுவதில் பிரதானமாக கருத்திற்கொள்ள வேண்டிய விடயம். அந்த வகையில் பழங்கள் ஊர வைத்த நீரானது போதையூட்டக்கூடியதாக இருந்தால் அது ஹராமாகும் அவ்வாறில்லையெனில் அது அனுமதிக்கப்பட்டதாகும்.
