إعدادات العرض
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபஹுக்கு முந்திய ஸுன்னாவில் قل يا أيها الكافرون قل هو الله أحد ஆகிய சூராக்களை…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபஹுக்கு முந்திய ஸுன்னாவில் قل يا أيها الكافرون قل هو الله أحد ஆகிய சூராக்களை ஓதினார்கள்
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபஹுக்கு முந்திய ஸுன்னாவில் قل يا أيها الكافرون قل هو الله أحد ஆகிய சூராக்களை ஓதினார்கள்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Türkçe اردو हिन्दी Tagalog 中文 Kurdî Português Русский Nederlands অসমীয়া ગુજરાતી Tiếng Việt Kiswahili پښتو සිංහල Hausa മലയാളം नेपाली Magyar ქართული తెలుగు Македонски Svenska Moore Română ไทย Українська मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Wolof ភាសាខ្មែរ ಕನ್ನಡ Malagasy Kinyarwanda Српски Shqipالشرح
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபஹுடைய முன் ஸுன்னாவில், முதல் ரக்அத்தில், ஃபாத்திஹாவுக்குப் பின்னர் ஸூரா அல்காபிரூனையும், இரண்டாம் ரக்அத்தில் ஸூரா அல்இக்லாஸையும் ஓதுவதை விரும்புவார்கள்.فوائد الحديث
பஜ்ருடைய முன் ஸுன்னாவில் இவ்விரு ஸூராக்களையும் ஓதுவது ஸுன்னாவாகும்.
இவ்விரு ஸூராக்களும் உளத்தூய்மையின் ஸூரா என அழைக்கப்படும். ஏனெனில் ஸூரத்துல் காஃபிரூனில், இணைவைப்பாளர்கள், அல்லாஹ்வை அன்றி வணங்கும் அனைத்தையும் விட்டு நீங்கிக் கொள்ளப்படுகின்றது. மேலும் அவர்கள் அல்லாஹ்வை வணங்குபவர்கள் அல்ல என்பதும் தெளிவாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அவர்களது இணைவைப்பு அமல்களை அழித்து விடுகின்றது. அல்லாஹ் மாத்திரமே வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதும் அதில் உள்ளது. இதேபோன்று, ஸூரா அல்இக்லாஸிலும், ஓரிறைக் கொள்கையும், உளத்தூய்மையும் கூறப் பட்டுள்ளதோடு, அல்லாஹ்வின் பண்புகளும் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.
التصنيفات
தொழும் முறை