إعدادات العرض
அபூ ஸஈதே! யார் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும்…
அபூ ஸஈதே! யார் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக்கொண்டால், அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : "அபூ ஸஈதே! யார் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக்கொண்டால், அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும்." ஆச்சரியப்பட்ட அபூ ஸஈத் அவர்கள், "அதை எனக்கு மீண்டும் கூறுங்கள்" என்று கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் கூறிவிட்டு மேலும் இவ்வாறு கூறினார்கள் : "இன்னுமொன்று உள்ளது, அதைக் கொண்டு ஓர் அடியான் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுவான்" அப்போது அபூ ஸஈத் அவர்கள், 'அது என்ன அல்லாஹ்வின் தூதரே!' எனக் கேட்ட போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவது; அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவது" என்று கூறினார்கள்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Kurdî Tiếng Việt অসমীয়া Nederlands Kiswahili සිංහල ગુજરાતી Magyar ქართული Română Português ไทย తెలుగు मराठी دری አማርኛ Malagasy Македонски ភាសាខ្មែរ Українська ਪੰਜਾਬੀ پښتو Wolof Moore Svenska മലയാളംالشرح
இங்கு நபியவர்கள் அபூ ஸஈத் (ரலி) அவர்களிடம், யார் அல்லாஹ்வை ஈமான் கொண்டு, அவனை ரப்பாகவும், ஆட்சியாளானகவும், தலைவனாகவும், அதிகாரம் மிக்கவனாகவும் பொருந்திக் கொண்டு, இஸ்லாத்தின் ஏவல், விலக்கல்களுக்கு முழுவதுமாகக் கட்டுப்பட்டு அதனை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டு, நபியவர்களுக்கு வழங்கப்பட்ட, அவர்கள் எத்திவைத்த அனைத்துடனும் அவர்களை நபியாகவும் பொருந்திக் கொள்கின்றாரோ, அவருக்கு சுவனம் நிச்சயம் என்று கூறுகின்றார்கள். ஆச்சரியப்பட்ட அபூ ஸஈத் அவர்கள், "அதை எனக்கு மீண்டும் கூறுங்கள்" என்று கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் கூறிவிட்டு மேலும் இவ்வாறு கூறினார்கள் : "என்னிடம் இன்னுமொறு விடயமும் உள்ளது, அதைக் கொண்டு ஓர் அடியான் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுவான். ஒவ்வொரு படித்தரத்துக்கும் இடையில் வானம் பூமிக்கு இடையில் உள்ள அளவு இடைவெளி இருக்கும்" அப்போது அபூ ஸஈத் அவர்கள், 'அது என்ன அல்லாஹ்வின் தூதரே!' எனக்கேட்ட போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது; அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்று கூறினார்கள்.فوائد الحديث
அல்லாஹ்வை ரப்பாகப் பொருந்திக் கொள்வது, இஸ்லாமை தீனாகப் பொருந்திக் கொள்வது, முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகப் பொருந்திக் கொள்வது என்பன சுவனத்தில் நுழைவதற்கு அவசியமான சில அம்சங்களாகும்.
அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதன் மகத்துவம்.
அறப்போராளிக்கு சுவனத்தில் உள்ள உயர்ந்த அந்தஸ்து.
சுவனத்தில் மட்டிடமுடியாத படித்தரங்களும், எண்ணிலடங்காத அந்தஸ்துக்களும் உள்ளன. அறப்போராளிகளுக்கு அதில் நூறு படித்தரங்கள் உண்டு.
நன்மைகள், அதன் வாயில்கள் மற்றும் காரணிகளை அறிவதில் நபித்தோழர்களுக்கு இருந்த விருப்பம்.
