إعدادات العرض
'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு…
'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு மூட்டுக்கள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்".
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மர்ஸத் அல்கனவீ (ரலி) கூறினார்கள் : "நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு மூட்டுக்கள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்".
الترجمة
عربي বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ ไทย Русский 日本語 پښتو Tiếng Việt অসমীয়া Shqip Svenska cs ગુજરાતી አማርኛ Yorùbá සිංහල دری Кыргызча or rw so नेपाली mg roالشرح
ஹதீஸின் விளக்கம் : "ஸுஜூது செய்யும் படி நான் ஏவப்பட்டுள்ளேன்", "நாம் ஏவப்பட்டுள்ளோம்", நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள்". இவ்வாறு மூன்று அறிவிப்புக்கள் உள்ளன. அவை மூன்றும் புஹாரியில் இடம் பெற்றுள்ளவையாகும். நபி (ஸல்) அவர்களுக்கு ஏவப்பட்ட விடயம் அன்னாரது சமூகத்திற்கும் சேர்த்துத்தான் என்பது பொதுவிதியாகும். இங்கு "ஏழு மூட்டுக்கள்" என்பது மற்றொரு அறிவிப்பில் வந்துள்ள பிரகாரம் ஸூஜூதின் ஏழு உறுப்புக்களாகும். பின்னர் ஒவ்வொன்றாகக் கூறினார்கள். 1. நெற்றி, மேற்கண்ட அறிவிப்பில் உள்ளது போன்று மூக்கும் சேர்ந்தே நிலத்தில் பட வேண்டும். அதுவும் ஸுஜூதின் ஓர் உறுப்பு என்பதை உணர்த்தவே சுட்டிக்காட்டினார்கள். 2, 3. இரு கைகள், அதாவது இரு உள்ளங்கைகளே இங்கு நாடப்பட்டுள்ளது. பொதுவாக கை எனும் போது அப்பகுதியே நாடப்படுகின்றது. 4 - 7. இரு முட்டுக்கால்கள், மற்றும் இரு பாதங்களின் நுனிப்பகுதிகள். தொழுகை முறை பற்றி அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவித்த நபிமொழியில் "(ஸுஜூதில்) தனது கால் விரல்களால் கிப்லாத் திசையை முன்னோக்கினார்கள்" என இடம்பெற்றுள்ளது. ஆடை, முடிகளை சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்பதன் அர்த்தம் அவை நிலத்தில் படாதவாறு கூட்டிப் பிடித்துக் கொள்ளாமல் ஸுஜூதின் போது அவையும் நிலத்தில் படுவதற்காக அவ்வாறே அதனை விட்டுவிட வேண்டும் என்பதாகும்.فوائد الحديث
தொழுகையில் ஏழு உறுப்புக்கள் மீது ஸுஜூது செய்வது கடமையாகும். ஏனெனில் ஏவல்களில் அடிப்படை கடமையாகும்.
மூக்கின்றி நெற்றியில் மாத்திரமோ, நெற்றியின்றி மூக்கில் மாத்திரமோ ஸுஜூது செய்வது ஏற்கப்பட மாட்டாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நெற்றியைக் கூறும் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்.
குறித்த உறுப்புக்களில் குறிப்பிட்ட பிரகாரம் முழுமையாகப் பட வேண்டும். சிலது மாத்திரம் நிலத்தில் படுவது போதாது, நெற்றியில் முடியுமானளவு நிலத்தில் படச் செய்ய வேண்டும்.
குறித்த உறுப்பக்கள் எந்தவொன்றும் திறந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பதே வலுவான கருத்தாகும். ஏனெனில் அவற்றின் மீது ஸுஜூது செய்வதென்பது மூடியிருந்த நிலையில் செய்தாலும் அதற்கு ஸுஜூது எனப்படுகின்றது. அவசியம் மறைக்க வேண்டிய பகுதி வெளிப்படும் அச்சமுள்ளதால் இரு முட்டுக்கால்களையும் திறக்க வேண்டிய அவசியமில்லை என்பதில் கருத்து வேறுபாடில்லை. அதே போன்று பாதணிகளுடன் தொழ முடியுமென்பதால் இரு பாதங்களையும் திறக்க வேண்டிய அவசியமில்லை என்பதிலும் கருத்து வேறுபாடில்லை.
தொழுகையில் ஆடைகளை சேர்த்துப் பிடிப்பப்பது வெறுக்கத்தக்க செயலாகும்.
முடியை ஒன்று சேர்த்து பிரடறிக்குப் பின்னால் முடிச்சுப் போடுவதும் வெறுக்கத்தக்கதாகும். இதனைத் தொழுகைக்காக வேண்டியே செய்தாலும் சரி, அல்லது அதற்கு முன்னர் வேறு தேவைகளுக்காக செய்து, அவசியமின்றி அவிழ்க்காமல் அவ்வாறே தொழுதாலும் சரி.