إعدادات العرض
'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும்…
'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும்'
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும்'.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ Deutsch 日本語 پښتو অসমীয়া Shqip Svenska Čeština ગુજરાતી Yorùbá Nederlands ئۇيغۇرچە සිංහල دری Кыргызча Lietuvių Kinyarwanda नेपाली or ಕನ್ನಡ Oromoo Română Soomaali Српски Wolof Moore Українська Azərbaycan ქართული Magyar Македонски bm አማርኛ Български Malagasyالشرح
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெரும்பவாங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறார்கள்; அவற்றை செய்பவன் இம்மை அல்லது மறுமையில் கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவான். அவற்றுள் முதலாவது : அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் : இதன் கருத்து ; வணக்க வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு செலுத்துதல், உலூஹிய்யா ருபூபிய்யா,அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத் -(அல்லாஹ்வின் அழகிய நாமங்களும் பண்புகளும்) போன்ற விடயங்களில் அல்லாஹ் தனக்கென தனித்துவமாக பெற்றிருக்கும் விடயங்களில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதோரும் பெற்றுள்ளனர் என சமப்படுத்துவதினை குறிக்கும். இரண்டாவது : ' பெற்றோரைத் துன்புறுத்துதல் நோவினை செய்தல்': என்பது சொல் மற்றும் செயல் ரீதியான அனைத்து விடயங்கள் மூலமும் பெற்றோரை துன்புறுத்துவதையும் அவர்களுக்கு உபகாரம் செய்யாதிருத்தலையும் குறிக்கிறது. மூன்றாவது : எவ்வித நியாயமான காரணமுமில்லாது அநியாயமாகவும், அத்துமீறியும் ஒருவரை கொலை செய்தல். நான்காவது : பொய் சத்தியம் என்பது ' பொய்யென்று தெரிந்துகொண்டே ஒரு விவகாரம் சம்பந்தமாக பொய்யாக சத்தியம் செய்தலைக் இது குறிக்கிறது. 'அல் யமீனுல் கமூஸ்' என இச்சத்தியம் அழைக்கப்படக் காரணம் குறித்த நபரை இந்த சத்தியமானது பாவத்தில் அல்லது நரகில் தள்ளிவிடுவதினலாகும்.فوائد الحديث
பொய் சத்தியத்தின் ஆபத்து மற்றும் குற்றத்தின் கடுமை காரணமாக அதற்கு கப்பாரா குற்றப் பரிகாரம் எதுவும் கிடையாது. மாறாக அதற்காக தவ்பாவே பரிகாரமாக அமையும்.
இந்நபிமொழியில் இந்நான்குடன் மாத்திரம் சுருக்கிக் கொண்டிருப்பது பாவத்தால் இவை ஆபத்தானவை, என்பதற்காகவே தவிர இந்த நான்கு விடயங்கள் மாத்திரமதான் பெரும்பவங்கள் என்பது இதன் கருத்தல்ல என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும். இதுவல்லாத பல பெரும்பாவங்கள் உண்டு.
பாவங்களை பெரும்பாவங்கள், சிறுபாவங்கள் என இரண்டாக வகைப்படுத்திட முடியும், அதில் பெரும்பாவம் என்பது குறிப்பிட்ட செயலைச் செய்தால் சாபம் ஏற்படுதல், மற்றும் குறிப்பிட்ட குற்றங்களுக்கு ஷரீஆ நிர்ணயித்திருக்கும் உலகியல், தண்டனை கிடைத்தல், அல்லது நரகத்தினுள் நுழைதல் என்ற மறுமை எச்சரிக்கையை வலியுறுத்தும் அனைத்துப் பாவங்களையும் குறிக்கும். பெரும்பாவங்கள் பல படித்தரங்களைக் கொண்டது அவற்றில் சில சிலவற்றைவிடவும் மிகவும் கண்டனத்திற்குரிய கடுமையாக தடைசெய்யப்பட்டவையாக உள்ளன. பெரும்பவங்களைத் தவிர்ந்தவை அனைத்தும் சிறு பாவங்களாகும்.
التصنيفات
பாவங்களைக் கண்டித்தல்