إعدادات العرض
யாருக்கு இரு மனைவியர் இருந்து, அவர்களில் ஒருவர் பக்கம் சாய்ந்து விடுகின்றாரோ, அவர் மறுமையில் உடலின் ஒரு பாதி…
யாருக்கு இரு மனைவியர் இருந்து, அவர்களில் ஒருவர் பக்கம் சாய்ந்து விடுகின்றாரோ, அவர் மறுமையில் உடலின் ஒரு பாதி வளைந்த நிலையில் வருவார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: யாருக்கு இரு மனைவியர் இருந்து, அவர்களில் ஒருவர் பக்கம் சாய்ந்து விடுகின்றாரோ, அவர் மறுமையில் உடலின் ஒரு பாதி வளைந்த நிலையில் வருவார்.
الترجمة
العربية Bosanski English فارسی Français Indonesia Русский Türkçe اردو हिन्दी 中文 Kurdî Português Nederlands অসমীয়া Tiếng Việt ગુજરાતી Kiswahili پښتو සිංහල Hausa Tagalog മലയാളം नेपाली Magyar ქართული తెలుగు Македонски Svenska Moore Română ไทย Українська मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ বাংলা Wolof ភាសាខ្មែរ ಕನ್ನಡ Malagasy Kinyarwanda Shqip Српскиالشرح
யாருக்காவது பல மனைவியர் இருந்து, செலவழித்தல், தங்குமிடம் மற்றும் ஆடை வழங்கல், இராத்தரித்தல் போன்ற இயலுமான அம்சங்களில் அவர்களிடையே நீதம் செலுத்தா விட்டால் அதற்குத் தண்டனையாக மறுமையில் அவரது உடலின் ஒரு பாதி வளைந்தவாராக வருவார் என நபியவர்கள் கூறுகின்றார்கள். மனைவியரோடு நடந்து கொள்வதில் ஒரு பக்கம் சாய்ந்து, அநீதமிழைத்தமைக்கான தண்டனையாக இவ்வாறு வளைந்து வருவார்.فوائد الحديث
ஒரு மனிதர் தனது மனைவியருக்கு மத்தியில் சரியாகப் பங்குவைப்பது கட்டாயமாகும். செலவழித்தல், இராத்தரித்தல், அழகாக நடத்துதல் போன்ற தனது சக்திக்குற்பட்ட விடயங்களில் ஒருவரை விட்டு இன்னொருவர் பக்கம் சாய்வது தடுக்கப்பட்டுள்ளது.
பங்குவைத்தல் போன்ற தன் சக்திக்கு உட்பட்ட விடயங்களில் மனிதன் சமத்துவம் பேணுவது கட்டாயமாகும். நேசம், உளச்சாய்வு போன்ற மனித சக்திக்கு உட்படாத விடயங்கள் இந்த ஹதீஸில் நுழையமாட்டாது. '"(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது;" ' (அந்நிஸா : 129) என்ற வசனத்தின் மூலம் நாடப்படுவது அதுவே.
செயலுக்கு ஒத்ததாகவே கூலியும் அமையும். ஒரு மனிதர் இவ்வுலகில் ஒரு மனைவியை விட இன்னொருவர் பக்கம் சாய்ந்ததால் மறுமையில், தனது உடலின் ஒரு பாதி இன்னொரு பாதியை விட வளைந்த நிலையில் வருவார்.
அடியார்களின் உரிமைகள் மகத்துவப்படுத்தப் படும். அதில் விட்டுக்கொடுப்பு கிடையாது. ஏனெனில், அவை விட்டுக்கொடுக்கப்படாமல் எடுத்துக் கொள்ளப்படுபவை
பல மனைவியருக்கு மத்தியில் நீதமாக நடக்க இயலாது என நினைக்கும் ஒருவர் ஒரு மனைவியுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்வது சிறந்தது. அவர் மார்க்கத்தில் குறைவைக்காமல் இருக்கவேண்டும் என்பதே அதன் காரணம். "ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்துகொள்ளுங்கள்)" (அந்நிஸா : 03).
التصنيفات
தம்பதியர்களுக்கிடையிலான உறவு