إعدادات العرض
'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து…
'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது : (என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காயம் குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், பாத்திமா, நபி (ஸல்) அவர்களை அங்கு காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப் போனோம். அவர்கள், ''நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில்பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், ''நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Hausa Kurdî Português සිංහල অসমীয়া Kiswahili Tiếng Việt ગુજરાતી Nederlands پښتو नेपाली മലയാളം Svenska Кыргызча Română Српски తెలుగు ქართული Moore Magyar Македонски Čeština ಕನ್ನಡ Українська Azərbaycan Kinyarwanda Wolof Malagasy ไทย मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Deutsch ភាសាខ្មែរ Lietuvių Oromoo Shqipالشرح
நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா, மாவு அரைத்ததால் தனது கையில் ஏற்பட்ட தழும்புகள்; குறித்து தனது தந்தையிடம் முறையிட்டார். சில கைதிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, வீட்டு வேலைகளில் தனக்கு உதவ அவர்களில் ஒருவரைக் கேட்க நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அவ்வேளை நபியவர்கள் வீட்டில் இருக்கவில்லை. ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை கண்டு விவரத்தை கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வந்த போது, பாத்திமா (ரழி) அவர்கள் ஒரு பணியாளரைக் கேட்பதற்காக வந்துவிட்டு சென்ற செய்தியைக் ஆஇஷா (ரழி) நபியவர்களிடம் கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாத்திமா மற்றும் அலி (ரழி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அந்த நேரத்தில், இருவரும் படுக்கையில் படுத்து உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை நபியவர்கள் அவர்களுக்கு இடையே அமர்ந்தார்கள், அப்போது அலி (ரழி) தனது வயிற்றில் நபியவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை உணர்ந்தார். பின்னர் அவர்கள் இருவரிடமும் நபியவர்கள் கூறினார்கள்: ' நீங்கள் இருவரும் என்னிடம் ஒரு வேலைக்காரனைக் தருமாறு கேட்டதைவிடவும் சிறந்த ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்கள் இருவரும், 'ஆம்' என்றார்கள். அப்போது நபியவர்கள் அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள் : நீங்கள் இருவரும் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது, அல்லாஹு அக்பர் என்று 34 முறை சொல்லுங்கள். சுப்ஹானல்லாஹ் என்று 33 முறை சொல்லுங்கள். அல்ஹம்துலில்லாஹ் என்று 33 முறை சொல்லுங்கள். இந்த திக்ர் ஒரு வேலைக்காரனை விட உங்கள் இருவருக்கும் சிறந்தது என்றார்கள்.فوائد الحديث
இந்த அருள்நிறைந்த திக்ரை தவறாமல் தொடர்ந்தும் செய்வது வரவேற்கத்தக்க விடயமாகும். அலி (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் தினமும் இரவில் இந்த திக்ரை ஓதி வரவேண்டும் என்று கூறிய அறிவுரையை பேணி நடந்தார்கள். அந்த வகையில் ஸிப்பீன் யுத்த இரவன்று கூட அலி (ரழி) அவர்கள் இந்த திக்ரை ஓதாதமல் தூங்க வில்லை என்ற செய்தி பதிவாகியுள்ளது.
இந்த திக்ரை இரவில் தூங்கும் போது ஓத வேண்டும். ஏனெனில் ஸஹீஹ் முஸ்லிமில், முஆத் அவர்கள் ஷுஃபாவின் மூலம் அறிவிக்கும் அறிவிப்பின் வாசக்த்தில் : 'நீங்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது.' என்று இடம்பெற்றுள்ளது.
ஒரு முஸ்லிம் இரவின் முதல் பகுதியில் இந்த திக்ரைச் சொல்ல மறந்துவிட்டு, கடைசி பகுதியில் அதை நினைவில் வைத்திருந்தால், அந்த நேரத்தில் அதைச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அலி (ரழி) அவர்கள், ஸிப்பீன் இரவில் இரவின் முதல் பகுதியில் அதைச் சொல்ல மறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள், பின்னர் அவருக்கு ஞாபகம் வந்ததும், ஸுப்ஹுக்கு முன் அதைச் சொன்னார்கள்.
முஹல்லப் கூறுகிறார்: ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையில் இந்த உலகத்தை விட மறுமையை முன்னுரிமைப்படுத்தும் நடைமுறையை கடைப் பிடிப்பது போல, அவர் தனது குடும்பத்தினருக்கும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும், அவர்களுக்கு அவ்வாறு செய்ய திறன் இருந்தால்.
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) குறிப்பிடுகையில் : இந்த திக்ரை வழமையாக்கிக் கொண்ட ஒருவருக்கு, களைப்பு ஏற்பட்டாலும் அதிக வேலை செய்வது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார்.
இமாம் அய்னி கூறுகிறார்: இந்த திக்ர் மிகவும் சிறந்தது என்பதற்கான ஒரு காரணம், திக்ரானது மறுமையுடனும், பணியாள் இந்த உலகத்துடனும் சம்பந்தப்பட்டதாக இருப்பதுதான். அந்த வகையில் மறுமை இந்த உலகத்தை விட சிறந்தது என்பது வெளிப்படையானது. மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்த திக்ருகளின் விளைவாக, வேலைக்காரனை விட அதிக வேலை செய்யக்கூடிய அளவுக்கு அவர்களுக்குள் செயல்சக்தி உருவாகுவது என்ற ஒரு விடயமும் இதில் அடங்கியிருப்பதாகும்.
