'நிச்சயமாக மதுபானம் தடுக்கப்பட்டுவிட்டது.'

'நிச்சயமாக மதுபானம் தடுக்கப்பட்டுவிட்டது.'

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் அபூ தல்ஹாவின் வீட்டில் மக்களுக்கு (மது) புகட்டுபவனாக இருந்தேன். அந்நாட்களில் அவர்களது மதுபானம் என்பது, 'பழீக்' எனப்படும் (ஈத்தம் பழத்தால் செய்யப்படும்) மதுவாக இருந்தது. அப்போது நபியவர்கள் ஓர் அழைப்பாளியை ஏவி, 'நிச்சயமாக மதுபானம் தடுக்கப்பட்டுவிட்டது.' என்று அறிவிக்கச் செய்தார்கள். அப்போது அபூ தல்ஹா என்னிடம், 'வெளியே சென்று, இதைக் கொட்டிவிடு' என்று கூறினார்கள். நானும் வெளியேறி அதைக் கொட்டினேன். அது மதீனாவின் பாதைகளில் ஓடியது. அப்போது மக்களில் சிலர், 'சில மனிதர்கள், மது தம்முடைய வயிற்றில் இருக்கும் போதே கொல்லப்பட்டுள்ளனரே' என்று கூறிய போது, "ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப் பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது (அல் மாஇதா : 93) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, அவர்கள், அவர்களது தாயின் கணவராகிய, அபூ தல்ஹாவின் வீட்டில் மக்களுக்கு (மது) புகட்டுபவனாக இருந்துள்ளார்கள். அந்நாட்களில் அவர்களது மதுபானம் என்பது, 'பழீக்' எனப்படும் (ஈத்தம் பழத்தால் செய்யப்படும்) மதுவாக இருந்தது. அப்போது நபியவர்கள் ஓர் அழைப்பாளியை ஏவி, 'நிச்சயமாக மதுபானம் தடுக்கப்பட்டுவிட்டது.' என்று அறிவிக்கச் செய்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : அப்போது அபூ தல்ஹா என்னிடம், 'வெளியே சென்று, இதைக் கொட்டிவிடு' என்று கூறினார்கள். நானும் வெளியேறி அதைக் கொட்டினேன். அது மதீனாவின் பாதைகளில் ஓடியது. அப்போது மக்களில் சிலர், 'சில மனிதர்கள், மது தம்முடைய வயிற்றில் இருக்கும் போதே கொல்லப்பட்டுள்ளனரே' என்று கூறிய போது, "ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப் பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. (அல் மாஇதா : 93) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான். அதாவது, விசுவாசம் கொணடவர்கள், மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்னர் அருந்திய, சாப்பிட்ட விடயங்களில் அவர்களுக்கு எந்தக் குற்றமும் கிடையாது.

فوائد الحديث

அபூ தல்ஹா மற்றும் நபித்தோழர்களின் சிறப்பு. ஏனெனில், அல்லாஹ்வின் கட்டளைக்கு துரிதமாகவும், எதிர்க் கேள்வியின்றியும் பதிலளித்து விட்டார்கள். இவ்வாறுதான் ஒரு உண்மையான முஸ்லிம் இருக்க வேண்டும்.

கம்ர் (மது) என்பது, போதையை ஏற்படுத்தும் அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு பெயராகும்.

பழீக் எனப்படுவது, (ஈத்தம் பழத்தின் படித்தரங்களாகிய) புஸ்ர் மற்றும் தம்ர் ஆகியவை கலந்து, நெருப்பில் காட்டப்படாமல் செய்யப்படும் ஒரு மதுபானமாகும். புஸ்ர் என்பது, ஈத்தம்பழத்தின் கனிவதற்கு முந்திய நிலையாகும்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : முஹல்லப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : மதுபானம் பாதையில் கொட்டப்பட்டமைக்கான காரணம் யாதெனில், அதைப் புறக்கணிப்பதாக பகிரங்கமாக அறிவிக்கவும், அதை விட்டுவிட்டமை பிரபல்யமடைவதற்குமாகும். அதைப் பாதையில் கொட்டுவதால் வரும் நோவினையை விட, இதன் நலன் அதிகமாகும்.

அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செய்துள்ள அருளைத் தெளிவுபடுத்தல். அதாவது, அவன் சட்டங்களை இறக்க முன்னர் செய்யப் பட்டவற்றிற்காக அல்லாஹ் விசாரிக்க மாட்டான்.

அல்லாஹ் மதுவைத் தடைசெய்துள்ளமைக்கான காரணமாவது, அது, பகுத்தறிவு மற்றும் சொத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கெடுதிகளைக் கொண்டிருப்பதாகும். அதன் விளைவாக மனிதனின் புத்தி பேதலிப்பதால், அவன் நிறையப் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றான்.

التصنيفات

அல்குர்ஆன் வசனங்கள் இறங்கிய காரணங்கள், தடைசெய்யப்பட்ட குடிபானங்கள்