அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்;

அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்;

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்), 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நான், அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்சில் கதாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத் என்று கூறுகிறேன் என்றார்கள். (பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!).

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகைக்காக இஹ்ராம் தக்பீர் கூறினால் ஸுறா பாத்திஹா ஒத முன் சொற்ப நேரம் மௌனமாக இருப்பார்கள். அந்நேரத்தில் அவர்கள் தொழுகையை ஆரம்பிப்பதற்காக சில துஆக்களை ஒதுவார்கள். அவ்வாறான துஆக்களில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்சில் கத்தாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத் என்று கூறுகிறேன் என்றார்கள். (பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!) நபியரவர்கள் இந்த துஆவில் கிழக்கும் மேற்கும் சந்திப்பது எப்படி அசாத்தியமானதோ அதே போன்று தனக்கும் தவறுகளுக்குமிடையில்; -அதற்குட்படாதாவாறு- மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்துமாறு பிரார்த்தனை புரிகிறார்கள். அவ்வாறு பாவத்திற்குள் அகப்பட்டுவிட்டால் அப்பாவக் கரையை வெள்ளை ஆடையின் அழுக்கை சுத்தப்படுத்துவது போன்று தூய்மைப்படுத்துமாறு வேண்டுகிறார்கள். தனது தவறுகளை கழுவுமாறும் அதன் சூட்டையும் சுவாலையையும் நீர் பணிக்கட்டி ஆலங்கட்டி போன்றவற்றால் தனித்து விடுமாறும் வேண்டுகிறார்கள்.

فوائد الحديث

ஜஹ்ரியத்தான தொழுகையாக – இமாம் சப்பதமாக ஓதும் தொழுகை- இருப்பினும் துஆஉல் இஸ்திப்தாஹை -தக்பீர் கட்டியதும் ஓதும் துஆக்கள்- சப்பதமின்றி ஓதுதல்.

ஸஹாபாக்கள் நபியவர்களின் எல்லா நிலைகளையும் அறிந்துகொள்வதில் ஸஹாபக்களுக்கிருந்த ஆர்வம்.

இது தவிர துஆஉல் இஸ்திப்தாஹ் பல வடிவங்களில் -முறைகளில்- இடம்பெற்றுள்ளது. அவற்றை கண்டறிந்து அவைகள் ஒவ்வொன்றையும் ஓதிவருவது மிகவும் சிறப்பானது. அதாவது ஒரே துஆவை ஒதாது ஏனைய துஆக்களையும் மாறி மாறி ஒதுவது சிறந்து.

التصنيفات

தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகள்