إعدادات العرض
ஒரு முஸ்லிமான - அல்லது முஃமினான - ஒரு அடியான் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும்…
ஒரு முஸ்லிமான - அல்லது முஃமினான - ஒரு அடியான் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முஸ்லிமான - அல்லது முஃமினான - ஒரு அடியான் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும். அவர் தனது இரு கைகளையும் கழுவினால், அவரது இரு கைகளும் பிடித்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது இரு கைகளையும் விட்டு வெளியேறிவிடும். அவர் இரு கால்களையும் கழுவினால், அவர் தனது இரு கால்களாலும் நடந்துசென்ற அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - வெளியேறிவிடும். இவ்வாறே அவர் பாவங்களை விட்டும், தூய்மையடைந்த ஒருவராக வெளியேறுவார்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහල Hausa Kurdî অসমীয়া Nederlands Kiswahili ગુજરાતી Magyar ქართული Română Português ไทย తెలుగు मराठी دری አማርኛ Malagasy Македонски ភាសាខ្មែរ Українська ਪੰਜਾਬੀ پښتو Wolof Moore Svenska മലയാളം ಕನ್ನಡالشرح
இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் அல்லது முஃமின் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்து சிறிய பாவங்களும் கழுவிய பின்னர் விழும் நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும் என்றும், அவர் தனது இரு கைகளையும் கழுவினால், அவரது இரு கைகளும் செய்த அனைத்து சிறிய பாவங்களும் கழுவிய பின்னர் விழும் நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது இரு கைகளையும் விட்டு வெளியேறிவிடும் என்றும், அவர் இரு கால்களையும் கழுவினால், அவர் தனது இரு கால்களாலும் நடந்துசென்ற அனைத்து சிறிய பாவங்களும் கழுவிய பின்னர் விழும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - வெளியேறி விடும் எனவும், இவ்வாறே அவர், வுழூ நிறைவடையும் போது, சிறிய பாவங்களை விட்டும், தூய்மையடைந்த ஒருவராக வெளியேறுவார் எனவும் தெளிவு படுத்துகின்றார்கள்.فوائد الحديث
வுழூவை பேணிச் செய்வதன் சிறப்பு மேலும் அது பாவங்களுக்குப் பரிகாரமாக உள்ளமை.
வணக்க, வழிபாடுகளுக்கு உள்ள நன்மைகள் மற்றும் கூலிகளைக் கூறி, மக்களுக்கு ஆர்வமூட்டுவது நபியவர்களின் வழிமுறைகளில் ஒன்றாகும்.
மனித உறுப்புக்களில் ஒவ்வொரு உறுப்பும் சில பாவங்களில் ஈடுபடுகின்றன. அதனால், அந்தப் பாவங்கள், அவை செய்யப்பட்ட உறுப்புக்களுடனேயே இருக்கும். பாவமன்னிப்பு வழங்கப்படும் போது, அவ்வுறுப்புக்களில் இருந்தே வெளியேறுகின்றன.
வுழூ என்பது, அதன் உறுப்புக்களைக் கழுவும் போது புறச் சுத்தத்தைப் பெற்றுத் தருகின்றது. மேலும், அவ்வுறுப்புக்களால் செய்யப்பட்ட, பாவங்களை நீக்கி அகச் சுத்தத்தையும் பெற்றுத் தருகின்றது.
