إعدادات العرض
உங்களது சொத்துக்கள், உயிர்கள், நாவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இணைவைப்பாளர்களுக்கு எதிராகப் போரிடுங்கள்
உங்களது சொத்துக்கள், உயிர்கள், நாவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இணைவைப்பாளர்களுக்கு எதிராகப் போரிடுங்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : உங்களது சொத்துக்கள், உயிர்கள், நாவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இணைவைப்பாளர்களுக்கு எதிராகப் போரிடுங்கள்.
الترجمة
العربية Bosanski English فارسی Français Indonesia Русский Türkçe اردو हिन्दी 中文 Kurdî Português Nederlands অসমীয়া Tiếng Việt ગુજરાતી Kiswahili پښتو සිංහල Hausa Tagalog മലയാളം नेपाली Magyar ქართული తెలుగు Македонски Svenska Moore Română ไทย Українська मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ বাংলা Wolof ភាសាខ្មែរ ಕನ್ನಡ Malagasy Kinyarwanda Shqip Yorùbá Српскиالشرح
அல்லாஹ்வின் வார்த்தையே உயர்ந்ததாக இருக்கும் நோக்கில், இயன்றளவு எல்லா வழிகளையும் பயன்படுத்தி, நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிடுமாறு அல்லாஹ் தனது நபிக்கு ஏவுகின்றான். பின்வருவன அவற்றில் உள்ளவையாகும் : 1. அவர்களுக்கெதிராக யுத்தம் செய்வதற்காக ஆயுதங்கள் வாங்குதல், போராளிகளுக்கு செலவழித்தல் போன்ற அமைப்பில் பணம் செலவழித்தல். 2. அவர்களுடன் நேரடியாகப் போரிட உடல் மற்றும் உயிரைக் கொண்டு வெளியேறல். 3.அவர்களை நாவினால் இம்மார்க்கத்தை நோக்கி அழைத்தல், அவர்களிடம் ஆதாரங்களை முன்வைத்தல், அவர்களைக் கண்டித்தல் அவர்களுக்கு மறுப்பளித்தல்.فوائد الحديث
ஒவ்வொருவரும் அவரவர் இயலுமைக்கு ஏற்ப உயிராலும், பணத்தாலும், நாவினாலும் இணைவைப்பாளர்களுடன் போரிடல். உயிரைப் பணயம் வைத்துப் போரிடுவது மாத்திரமல்ல ஜிஹாத் என்பது.
இங்கு அறப்போர் ஏவப்பட்டுள்ளது கடமை என்பதையே குறிக்கும். அது சிலவேளை ஒவ்வொரு தனிநபர் மீதும் கடமையாகலாம். இன்னும் சிலவேளை பொதுவாக சமூகத்தின் மீது கடமையாகலாம்.
பல காரணங்களுக்காக அல்லாஹ் அறப்போரை மார்க்கமாக்கியுள்ளான். 1. இணைவைப்பையும் இணைவைப்பாளர்களையும் எதிர்த்துப் போரிடல். 2. அல்லாஹ்வை நோக்கி அழைக்கும் பாதையில் குறுக்கிடும் தடைகளை நீக்குதல். 3. அகீதாவை அதற்கு எதிரானவற்றை விட்டும் பாதுகாத்தல். 4. முஸ்லிம்களையும் அவர்களது தேசங்களையும், மானங்களையும், சொத்துக்களையும் பாதுகாத்தல்.
التصنيفات
போரின் சட்டம்