إعدادات العرض
'என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என்…
'என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூட (அவரது) அந்தத் தர்மம் எட்ட முடியாது.'
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூட (அவரது) அந்தத் தர்மம் எட்ட முடியாது.'
[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]
الترجمة
العربية Bosanski English فارسی Français Русский 中文 हिन्दी Indonesia اردو Hausa Kurdî Português অসমীয়া Kiswahili Tagalog ગુજરાતી Tiếng Việt Nederlands සිංහල پښتو नेपाली മലയാളം Кыргызча Română Svenska తెలుగు ქართული Moore Српски Magyar Македонски Čeština Українська አማርኛ Kinyarwanda Malagasy Wolof ไทย मराठी ਪੰਜਾਬੀ دری Türkçe বাংলা ភាសាខ្មែរ Lietuvių Deutsch ಕನ್ನಡ Oromoo Azərbaycan Shqipالشرح
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லலம் அவர்கள், குறிப்பாக ஆரம்பத்தில் இஸ்லாத்தைத் தவழுவிய முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரி ஸஹாபாக்களைக் திட்டுவதை தடைசெய்துள்ளார்கள். மேலும், ஒருவர் உஹுது மலையின் தங்கத்திற்கு சமமான தொகையைச் செலவிட்டாலும்,ஒரு நபித்தோழரின்; (ஒரு)கைக்குவியல் அல்லது அதன் அரைவாசியை செலவழித்து பெறும் வெகுமதியை அவர் பெறமாட்டார். ஒரு முத்து என்பது ஒரு நடுத்தர அளவிலான நபரின் உள்ளங்கை அளவாகும். தோழர்கள் தங்கள் இஹ்லாஸ் (மனத்தூய்மை) மற்றும் உண்மையான எண்ணத்தின் காரணமாகவும் மக்கா வெற்றிக்கு முன் கடுமையான தேவை இருந்த சந்தர்ப்பத்தில்;, போர்களுக்காக மிகவும் ஆர்வத்துடன் உதவியமை காரணமாகவும் இவ்வளவு வெகுமதியையும் அந்தஸ்த்தையும்; பெற்றனர்.فوائد الحديث
ஸஹாபாக்களை திட்டுவதும்,ஏசுவதும் ஹராமாகும் மட்டுமல்லாது இது பெரும் பாவங்களில் ஒன்றுமாகும்
التصنيفات
நபித்தோழர்கள் பற்றிய நம்பிக்கை