إعدادات العرض
ஓர் அடியான் இன்னோர் அடியானின் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான்
ஓர் அடியான் இன்னோர் அடியானின் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ஓர் அடியான் இன்னோர் அடியானின் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහල Hausa Kurdî Kiswahili Português Nederlands অসমীয়া ગુજરાતી پښتو മലയാളം नेपाली ქართული Magyar తెలుగు Македонски Svenska Moore Română Українська ไทย मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Wolof ភាសាខ្មែរ ಕನ್ನಡ Yorùbá Српски Malagasy Kinyarwanda Shqipالشرح
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிம் ஒருவரை ஏதாவதொரு விடயத்தில் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான். ஏனெனில், கூலியென்பது குறித்த செயலுக்க ஒப்பாகவே கிடைக்கும். அல்லாஹ் அவரை மறைப்பதென்பது, அவரது குறைகளையும், பாவங்களையும், மஹ்சரில் மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்தாமல் மறைப்பதாகும். சிலவேளை, அவற்றை அவரிடமே கூறாமலோ, விசாரிக்காமலோ கூட இருக்கலாம்.فوائد الحديث
ஒரு முஸ்லிம் ஒரு பாவத்தை செய்யும் போது அதைக் கண்டித்து. உபதேசிப்பதுடன், அதை மறைப்பதும் ஸுன்னாவாகும். ஆனால், பகிரங்கமாகப் பாவம் செய்யும் கெட்டவர்களில் ஒருவராக அவர் இருந்தால், அப்போது மறைப்பது நல்லதல்ல. ஏனெனில் அப்போது அவர்கள் மேலும் தைரியம் பெறுவார்கள். அவரது விவகாரம் பொறுப்புதாரிகளுக்கு எத்திவைக்கப்படவேண்டும். இங்கு அவரது குறை இன்னொருவரிடம் கூறப்படுவதாக இருந்தாலும், இவர் பகிரங்கமாகப் பாவம் செய்வதே அவ்வாறு கூறக் காரணமாகும்.
அடுத்தவர்களின் தவறுகளை மறைப்பதில் ஆர்வமூட்டல்.
மறைப்பதின் பயன்களில் ஒன்று என்னவென்றால், அந்தப்பாவிக்கு சுயபரிசோதனை செய்து, அல்லாஹ்வின் பால் மீளும் வாய்ப்பை அது வழங்குகின்றது. ஏனெனில், குறைகளையும், மறைக்கவேண்டியவற்றையும் பகிரங்கப்படுத்துவது, மானக்கேடானவற்றை பரப்புவதாகும். அது சமூக சூழலை சீர்குழைத்துவிடும். ஏனைய மக்களையும் அவ்வாறு செய்யத் தூண்டும்.
