إعدادات العرض
“இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு…
“இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.”
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : “இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.”
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Português Kurdî සිංහල Tiếng Việt Kiswahili অসমীয়া ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ಕನ್ನಡ Svenska Oromoo Македонски ไทย Українська తెలుగు پښتو मराठी ਪੰਜਾਬੀ دری Türkçe አማርኛ Malagasy ភាសាខ្មែរ Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
'யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடியும், அவனுடைய கூலியை எதிர்பார்த்தும் ஜிஹாதின் போது ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அல்லது ஜிஹாத் அல்லாத நிலையிலும் நோன்பு நோற்கிறரோ அல்லாஹ் தனது அருளின் மூலம், அவருக்கும் நரகத்திற்கும் இடையிலான எழுபது வருட தூரத்தை நீக்குகிறான்.' என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.فوائد الحديث
இமாம் நவவி கூறுகிறார்: இந்த ஹதீஸ் ஜிஹாதின் போது நோன்பு நோற்பதன் சிறப்பை குறிப்பிடுகிறது. இது, நோன்பினால் ஒருவருக்கு தீங்கு ஏற்படாதவருக்கும், எந்த உரிமையும் புறக்கணிக்கப்படாதவருக்கும், அவரின் போராட்டத்திலும் அல்லது அவருடைய ஜிஹாதின் முக்கிய கடமைகளிலும் எந்த இடையூறும் ஏற்படாதவருக்கும் பொருந்துவதாகக் கொள்ளப்படுகிறது.
உபரியான ( நப்லான) நோன்பை கடைப்பிடிக்க ஊக்குவித்தலும், அதற்கான விருப்பத்தை ஏற்படுத்தலும்.
நோன்பு நோற்பதில் இக்லாஸ் (உளத்தூய்மை) இருப்பதோடு அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்காகக் கொள்ளவது அவசியம். முகஸ்துதி (ரியா) மற்றும் பிறர் புகழ் நாடியோ (ஸும்ஆ) , அல்லது வேறு எந்த நோக்கங்களுக்காகவோ நோன்பு நோற்கக் கூடாது.
இமாம் ஸிந்தி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்: 'அல்லாஹ்வின் வழியில் (في سبيل الله)' என்ற சொல்லுக்கு, நிய்யத்தை (எண்ணத்தைச்)சீர்செய்தல் என்பதையும் குறிக்கலாம்; அல்லது அவர் போரில் ஈடுபட்ட நிலையில் நோன்பு நோற்பது என்பதையும் குறிக்கலாம். இரண்டாவது பொருளே இங்கு சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும்.
இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: "(எழுபது இலையுதிர் காலம்)" என்ற நபியவர்களது கூற்று: இலையுதிர் காலம் என்பது வருடத்தின் அறியப்பட்ட நேரம், இங்கு அர்த்தம் ஆண்டு. கோடை, குளிர்காலம் மற்றும் வசந்த காலம் போன்ற பிற பருவங்களை விட இலையுதிர் காலம் தனித்து குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் பழங்கள் அறுவடை செய்யப்படும் பருவத்தைப் போலவே இலையுதிர் காலம் மிகவும் வளமான பருவமாகும்.
التصنيفات
உபரியான நோன்பு