யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக்…

யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்' என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், 'அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்; அவர்கள், 'மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!' என்று பதிலளித்தார்கள்

அபூஉமாமா இயாஸ் இப்னு ஸஃலபா அல்ஹாரிஸீ (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் கூரினார்கள் : யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்' என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், 'அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்; அவர்கள், 'மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!' என்று பதிலளித்தார்கள்.

[சரியானது] [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி முஹம்மது ﷺ அவர்கள், ஒரு முஸ்லிமின் உரிமையை பறிப்பதற்காக தனக்கு சொந்தமில்லை என்பதை தெளிவாக அறிந்த நிலையில்; அல்லாஹ்வின் பெயரில் பொய்யாக சத்தியம் செய்வதை கடுமையாக எச்சரித்தார்கள். அத்தகைய செயலுக்கான தண்டனை நரகமாகும். சுவர்க்கம் மறுக்கப்படும்; இது பெரும் பாவங்களில் ஒன்றாகும். ஒரு மனிதர்: 'அல்லாஹ்வின் தூதரே சத்தியம் செய்து பறிக்கப்படும் பொருள் மிகவும் சிறியதாக இருந்தாலுமா ? என் கேட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள்: 'அது அராக் மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு சிறிய மிஸ்வாக் குச்சியாக இருந்தாலும் கூட' என்று பதில் கூறினார்கள்.

فوائد الحديث

பிறரின் உரிமைகளை பறிப்பது குறித்து மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும். அத்துடன் பிறரது உரிமைகள் சிறியதாக இருந்தாலும் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும். நீதிபதி தவறாக தீர்ப்பளித்தாலும், ஒருவருக்கு சொந்தமில்லாததை –உரிமையில்லாதவற்றை ஒருவர் எடுத்துக் கொள்ளுவது ஒருபோதும் அனுமதிக்கப்படாததாகும்.

நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: முஸ்லிம்களின் உரிமைகளை மீறுவது கடுமையாகத் தடை செய்யப்பட்டதாகும். அந்த உரிமையில் சிறியது அல்லது பெரியது என்ற வேறுபாடு இல்லை; ஏனெனில் நபி முஹம்மது ﷺ அவர்கள் 'அராக் மரத்தின் ஒரு சிறிய குச்சி (மிஸ்வாக்) யாக இருந்தாலும் கூட' என்று கூறியுள்ளது இதற்கான ஆதாரமாக அமைகிறது.

மேலும் நவவி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: இந்தத் தண்டனை, ஒரு முஸ்லிமின் உரிமையை பறித்து தவ்பா செய்யாமல் மரணமடைந்தவருக்கே உரியது. ஆனால், ஒருவர் தவ்பா செய்து, தன் செயலுக்காக மனம் வருந்தி, உரிமையை உரியவரிடம் திருப்பி கொடுத்து, மன்னிப்புக் கோரி, மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதி கொண்டால், அவர்மீது எந்தக் குற்றமும்; இல்லை.

இமாம் காழி இயாழ் அவர்கள் கூறுகிறார்கள்: உரிமைகளை மீறுவது-பரிப்பது குறித்து இங்கு 'முஸ்லிம்' என்று குறிப்பிட்டிருப்பது, ஷரீஅத்தில் அவர்கள் அதிகமாகப் பேசப்படுவதாலும், பொதுவாக பரிவர்த்தனைகள் அவர்களிடையே நடைபெறுவதன் காரணத்தினாலாகும். ஆனால் முஸ்லிமல்லாதவரின் உரிமை இதற்குப் புறம்பானது என்பதல்ல. அவர்களுக்கும் இதே தீர்ப்பே பொருந்தும். அதாவது அவர்களின் உரிமைகளை அநியாயமாக பரிப்பதும் ஹராமாகும்.

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: பொய் என்பது, ஒரு விடயம் குறித்து உண்மைக்கு மாறாகச் சொல்லுதல் ஆகும்; அது திட்டமிட்டு இருந்தாலும் அல்லது தவறுதலாக இருந்தாலும், கடந்த காலம் அல்லது எதிர்காலம் குறித்து சொன்னாலும்—அனைத்தும் பொய்யாகவே கருதப்படும்.

التصنيفات

அபகரித்தல்