إعدادات العرض
"ஸுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), "அல்ஹம்து லில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), "லாஇலாஹ…
"ஸுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), "அல்ஹம்து லில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), "லாஇலாஹ இல்லல்லாஹு" (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் பாதகம் எதுவுமில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) கூறுகின்றார்கள் : ""ஸுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), "அல்ஹம்து லில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), "லாஇலாஹ இல்லல்லாஹு" (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் பாதகம் எதுவுமில்லை".
الترجمة
عربي বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහල Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ Русский Deutsch 日本語 پښتو অসমীয়া Shqip Svenska cs ગુજરાતી አማርኛ Yorùbá Nederlands ئۇيغۇرچە ไทย دری ff hu kn Кыргызча Lietuvių or ro rw Soomaali Српски uz mos नेपालीالشرح
இந்த நான்கு வாசகங்களும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவை என்பதற்கு இந்த ஹதீஸ்.ஆதாரமாக விளங்குகின்றது மேலும் அவை மனிதன் பேசும் வாசகங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவையாகும்.ஏனெனில் இவை அல்லாஹ்வை தூய்மைப்படுத்தல் அவனுக்குக் கட்டாயம் இருக்க வேண்டிய அவனின் பண்புகளை எடுத்துக் கூறல் அவனை ஏகத்துவப்படுத்தி, அவனைப் பெருமைப் படுத்தல் எனும் மகத்தான விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது. மேலும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ளது போன்று அதன் சிறப்பினையும், அதன் நன்மைகளையும் அடையும் பொருட்டு அவற்றைக் கிரமமாக சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்பதுவும் இதிலிருந்து தெளிவாகின்றது.فوائد الحديث
அல்லாஹ்விற்கு நேசம் எனும் பண்பு உள்ளது, அவன் நற்செயல்களை நேசிக்கின்றான்.
ஏனைய வாசங்களை விட இந்த நான்கு வாசகங்களின் சிறப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது, அவை அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதாகும்.
இந்த நான்கு வாசகங்களையும் தொடர்ந்து கூற ஊக்குவித்தல், ஏனெனில் அல்லாஹ் ஒன்றை விரும்புகின்றான் என்றால் அடியான் அதனைப் பற்றி, பேணி வர வேண்டும்.
"இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் பாதகம் எதுவுமில்லை" எனும் வாசகத்தின் மூலம் இந்த மார்க்கம் மக்களுக்கு இலகுபடுத்திக் கொடுப்பதை உணரலாம்.
التصنيفات
பொதுவான திக்ருகள்