ஒரு கூட்டம் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறாமலும்ந நபி (ஸல்) அவர்களின் மீதுஸலவாத் கூறாமலும்…

ஒரு கூட்டம் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறாமலும்ந நபி (ஸல்) அவர்களின் மீதுஸலவாத் கூறாமலும் இருந்தால் கியாமத் நாளில்அவர்களுக்குஅது கைசேதமாக அமையும்.

ஒரு கூட்டம் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறாமலும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமலும் இருந்தால் கியாமத்நாளில் அவர்களுக்கு அது கைசேதமாக அமையும்.எனஅபூஹுரைரா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸானது அல்லாஹ்வையோ அவனது தூதரைப் பற்றியோ நினைவு கூறாது நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லாது ஒரிடத்தில் அமர்ந்து கலைந்து சென்ற கூட்டத்தின் இழப்பு மற்றும் துயர் பற்றி குறிப்பிடுகிறது. இவ்வாறான அமர்வுகள் யாவும் கியாமத் நாளில் பெரும் துயரமாக அமையும்.காரணம் யாதெனில் அவர்கள் இவ்வமர்வுகள் மூலம் எவ்விதப் பயனையும் அடைந்து கொள்ளவில்லை. இவ்வாரான அனுமதிக்கப்பட்ட அமர்வுகளின் நிலையே இவ்வாறிருக்கையில் புறம் பேசுவது போன்ற தடைசெய்யப்பட்ட அமர்வுகளாக இருந்தால் அதன் நிலை (குறித்து என்ன கூற முடியும்) மிகவும் ஆபத்தானதாக அமையும். எனவே அமர்வுகள், ஒன்று கூடல்கள் இறை சிந்தனை, நபியர்களின் மீது ஸலவாத் கூறல் போன்ற அம்சங்களால் நிரம்பிக் காணப்படுதல் வேண்டும்.

التصنيفات

பொதுவான திக்ருகள்