' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். என்னை…

' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் '{ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மக்காவிற்கு அருகில் அமைந்துள்ள கிராமமான ஹுதைபிய்யாவில் -அன்றிரவு பெய்த மழையைத் தொடர்ந்து- நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுப்ஹ் தொழுகையை நடாத்தினார்கள். ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்துக்கொண்ட பின் மக்களை நோக்கி தனது முகத்தைத் திருப்பி அவர்களிடம் 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று பதிலளித்தனர். அதற்கு நபியவர்கள்; மழைபொழியும் போது மக்கள் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டோர் அல்லாஹ்வை நிராகரித்தோர் என இரு பிரிவுகளாக பிரிந்துவிடுகின்றனர் என அவர்களுக்கு தெளிவு படுத்தினார்கள் அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் எமக்கு மழை பொழிந்தது எனக் கூறி மழைபொழிதல் எனும் விவகாரத்தை அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறியவர் இந்தபிரபஞ்சத்தை நிர்வகிக்கும் படைப்பாளனான அல்லாஹ்வை விசுவாசித்து, நட்சத்திரங்களை மறுத்தவராவார். இந்த,இந்த நட்சத்திரங்களினால்; எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவராவார்.மழைபொழிவதை கோல்கள் -நட்சத்திரங்களின் செயல் என இணைத்துக் கூறுவது சிறியவகை இணைவைப்பாகும். அல்லாஹ் மழைபொழிவிப்பதற்கு ஷரிஆரீதியான மற்றும் விதியின் அடிப்படையிலான இதற்கான எந்த காரணங்களையும் நட்சத்திரங்களுக்கு ஏற்படுத்தவில்லை. யார் மழை பொழிதல் மற்றும் பூமியில் நிகழும் பிற நிகழ்வுக்கு கோள்களின் தோற்றம் மற்றும் மறைவு போன்ற இயக்கங்களை காரணம் காட்டி, அவைதான் இவை நிகழ்வதற்கான உண்மையான காரணி என நம்புகிறானோ அவன் மிகப்பெரும் காபிராக இறைநிராகரிப்பாளனாக ஆகிவிடுகிறான்.

فوائد الحديث

மழை பொழிந்ததன் பின் مُطرنا بفضل الله ورحمته. 'அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறுவது விரும்பத்தக்க விடயமாகும்.

கோள்களும் நட்சத்திரங்களுமே உண்மையில் மழையை பொழியச்செய்கிறது என்று யார் கூறுகின்றானோ அவன் காபிராவான். இது பெரிய வகை குப்ராகும். அதே போல் யார் ஒருவர் இந்த நட்சத்திரங்களும் கோள்களும் மழை பொழிய காரணமாக இருக்கிறது என்று அவற்றைக் காரணமாக கூறுகிறாரோ அவரும் காபிராவார்.இது சிறியவகை குப்ரில் சேர்க்கப்படும்.

ஒரு அருளானது அது நிராகரிக்கப்படும் போது அது இறைநிராகரிப்புக்கு காரணமாகவும்,அதற்கு நன்றி செலுத்தப்படும் போது, ஈமானுக்கு -இறைநம்பிக்கைக்கு- காரணமாகவும் அமைந்துவிடுகிறது.

'இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுவது ஷிர்கிற்கு வழிவகுக்கும் காரணமாக அமைந்துவிடும் என்பதற்காக தடுக்கப்பட்டிருத்தல்.

அருளை பெறுவதிலும்,தீஙகிலிருந்து பாதுகாப்புப் பெறுவதிலும்; உள்ளம் அல்லாஹ்வுடன் இணைந்திருப்பது அவசியமாகும்.

التصنيفات

பரிபாலித்தல் விடயத்தில் ஏகத்துவம், இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுபவை, ஈமானின் கிளைகள், நிராகரிப்பு