إعدادات العرض
யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவருக்கு…
யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவருக்கு அது கிடைக்கவே செய்யும். அம்மனிதன் அவர் கூறியது போன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி அது மீண்டுவிடும்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவருக்கு அது கிடைக்கவே செய்யும். அம்மனிதன் அவர் கூறியது போன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி அது மீண்டுவிடும்.
[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]
الترجمة
العربية Tiếng Việt অসমীয়া Indonesia Nederlands Kiswahili English Hausa ગુજરાતી සිංහල Magyar ქართული Română Русский Português ไทย Bosanski తెలుగు मराठी دری Türkçe አማርኛ বাংলা Kurdî Malagasy Македонски Українська Tagalog ភាសាខ្មែរ ਪੰਜਾਬੀ پښتو Svenska Wolof Moore മലയാളം हिन्दी ಕನ್ನಡالشرح
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமைப் பார்த்து 'காபிரே!' என்று கூறினால், அந்த வார்த்தைக்கு அவர்களில் ஒருவர் தகுதியாகிவிடுவார். அம்மனிதன் அவர் கூறியதுபோன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி 'காபிர்' என்று அவர் கூறிய வார்த்தை மீண்டுவிடும்.فوائد الحديث
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமைப் பார்த்து, அவனிடமில்லாத நிகாரிப்பு, பெரும்பாவங்கள் போன்ற பண்புகளைக் கொண்டு அழைப்பதை எச்சரித்தல்.
இந்த கெட்டவார்த்தையை விட்டும் எச்சரித்தல், அவ்வாறு கூறுபவர் மிகப் பாரதூரமான ஆபத்தில் உள்ளார் என்பதை உணர்த்துதல். எனவே, நாவைப் பாதுகாத்துக் கொள்வதும், தெளிவான அறிவுடனேயே மாத்திரம் பேசுவதும் கட்டாயமாகும்.
