إعدادات العرض
'தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும்.…
'தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو हिन्दी 中文 Kurdî Português অসমীয়া Kiswahili ગુજરાતી Tiếng Việt Nederlands සිංහල Hausa پښتو नेपाली മലയാളം Кыргызча Română Svenska తెలుగు ქართული Moore Српски Magyar Македонски Čeština Українська Azərbaycan Kinyarwanda Malagasy Wolof ไทย मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ ភាសាខ្មែរ Lietuvių Deutsch ಕನ್ನಡ Oromoo Shqipالشرح
தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்ததும் அதிகம் நன்மையையும் சிறப்பையையும் பெற்றுத் தரக்கூடியதும் முதல் ஸப்பாகும். ஏனெனில் முதல் வரிசையில் இருப்போர் இமாமுக்கு நெருக்கமாக இருக்கவும், அவரது ஓதலை எளிதாகக் கேட்பதற்குமான வாய்ப்பை பெறுவதோடு பெண்களை விட்டும் தூரமாகவும் இருக்கிறார். ஆண்களுக்கு மிகக் குறைந்த நன்மையையும், சிறப்பையும் பெற்றுத்தரக்கூடியதும், ஷரீஆவின் வேண்டுகோளை விட்டும் தொலைவில் உள்ள ஒரு விடயமாக கடைசி வரிசை (ஸப்பு) உள்ளது. மாறாக, பெண்களுக்குரிய சிறந்த வரிசை (ஸஃப்பு) கடைசி வரிசையாகும். ஏனென்றால் அது அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது, மேலும் அது ஆண்களுடன் கலப்பதிலிருந்தும், அவர்களைப் பார்ப்பதிலிருந்தும், அவர்களால் சோதிக்கப்படுவதிலிருந்தும் வெகு தொலைவில் உள்ளது. ஆண்களுடன் அவர்கள் நெருக்கமாக இருப்பதால், சோதனைக்கு ஆளாகிறார்கள் என்பதால், அவர்களின் வரிசைகளில் மிக மோசமானது முதல் வரிசையாகும்.فوائد الحديث
நபி (ஸல்) அவர்கள் ஆண்களை வணக்க வழிபாடுகளில் விரைந்து செயற்படவும், தொழுகையின் முன் வரிசையில் இருக்கவும் ஊக்குவித்தார்கள்.
பெண்கள் பள்ளிவாயிலில் அடக்கத்துடனும், கௌரவமாகவும் ஆண்களுடன் கலக்காமல் தனியான வரிசைகளில் தொழ அனுமதிக்கப்படுகிறார்கள்,
பெண்கள் ஒரு பள்ளிவாசலில் தொழுகைக்காக ஒன்று கூடினால், பிரிந்திருக்காது, அவர்கள் ஆண்களைப் போல வரிசையில் நிற்பதோடு; அவர்களைப்; போல ஒன்றாக நின்று காலியான இடங்களை நிரப்ப வேண்டும்.
இஸ்லாமிய ஷரீஆ –மார்க்கம்- வழிபாட்டுத் தளங்களிலும் கூட பெண்கள் ஆண்களிடமிருந்து தனியாக இருக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தியுள்ளமை பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டிருத்தல்.
மக்கள் தங்கள் செயல்களுக்கு ஏற்ப வேவ்வேறு படித்தரங்களைக் கொண்டுள்ளனர்
இமாம் அந்-நவாவி அவர்கள் கூறுகிறார்கள்: பொதுவாக ஆண்களின் வரிசைகளைப் பொறுத்தவரை, முதல் வரிசையே எப்போதும் சிறந்த வரிசையாகும். கடைசி வரிசை எப்போதும் மோசமான வரிசையாகும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஹதீஸின் படி , பெண்கள் ஆண்களுடன் தொழும்போது, அவர்களின் மோசமான வரிசை முதல் வரிசையாகவும், சிறந்த வரிசை கடைசி வரிசையாகவும் இருக்கும். ஆனால் அவர்கள் தனித்தனி குழுக்களாக இருக்கும்போது, அவர்கள் ஆண்களைப் போலவே இருப்பார்கள். அவர்களின் சிறந்த வரிசை முதல் வரிசையாகவும், அவர்களின் மோசமான வரிசை கடைசி வரிசையாகவும் இருக்கும்.
இமாம் அந்-நவவி கூறுகிறார்கள்: இங்கு சிறப்பு குறிப்பிடப்பட்டு, நிற்பதை வலியுறுத்தி வந்த வரவேற்கத்தக்க முதலாவது வரிசை என்பது இமாமுக்கு பின்னால் உள்ள அடுத்த வரிசையாகும். அதில் நிற்பவர் முதலில் வருகிறாரா இல்லையா என்பதோ, இடையில் ஒரு தடுப்பு அல்லது ஏதாவது இருக்கிறதா என்பதோ கருத்திற் கொள்ளப் படுவதில்லை.
