இயற்கை மரபுகள் ஐந்து : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை…

இயற்கை மரபுகள் ஐந்து : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியனவாகும்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அல்லாஹ் இயல்பாகவே மக்களிடம் வைத்துள்ள ஐந்து மரபுகள் இஸ்லாத்தில் உள்ளன, அவற்றை நிறைவேற்றுபவர் இத்தூய மார்க்கத்திலுள்ள பாரிய சில விடயங்களைச் செய்தவராவார் என்பதை நபியவர்களிடம் செவிமடுத்ததாக அபூ ஹரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள இவ் ஐந்து விடயங்களும் இஸ்லாம் காட்டித் தந்துள்ள சுத்தங்களில் உள்ளவையாகும். 1. ஆணுறுப்பின் மேல் தோலை நீக்குவதன் மூலம் கத்னாச் செய்தல், அத்தோல் தொடர்ந்திருப்பதால் அசுத்தங்கள், அழுக்குகள் ஒன்று சேர்ந்து, பல நோய்கள், காயங்களைத் தோற்றுவித்து விடுகின்றன.2. மருமஸ்தானத்திலுள்ள முடிகளை மழித்தல், அது முன்துவரமாகவோ, பின்துவாரமாகவோ இருக்கலாம். அவை அவ்விடத்தில் தொடர்ந்திருப்பது அசுத்தங்கள் மூலம் மாசடையை வைக்கின்றது. சில வேளை மார்க்க சட்டபூர்வமான சுத்தத்தையும் அது பாதிக்கின்றது. 3.மீசையைக் கத்தரித்தல், இது தொடர்ந்திருப்பது தோற்றத்தை சிதைத்து விடுவதுடன், அதனுடன் பானங்களை அருந்துவதையும் வெறுக்கவைக்கின்றது. இது நெருப்பு வணங்கிகளுக்கு ஒப்பாகும் செயலாகும். 4. நகங்களை வெட்டுதல், அவை நிலைத்திருப்பதால் அழுக்குகள் சேர்ந்து, உணவுடன் கலந்து நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அத்துடன் அவசியம் கழுவ வேண்டிய சில பகுதிகள் நகத்தினுள் மறைந்திருப்பதால் சில வேளை பரிபூரணத் தூய்மைக்குத் தடையாகவும் இது இருக்கலாம். 5. அக்குள் முடிகளைக் களைதல், அவை தொடர்ந்திருப்பதால் துர்வாடைகள் தோன்றுகின்றன.

فوائد الحديث

அல்லாஹ் வைத்துள்ள இயற்கை உணர்வு அனைத்து நலவின் பக்கமும் அழைப்பதுடன், அனைத்து கெடுதிகளை விட்டும் தூரமாக்குகின்றது.

இயற்கை மரபுகள் ஐந்தாகும், இது வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையல்ல, எண்ணிக்கையின் மறுபுறக்கருத்து இங்கு ஆதாரமாகக் கொள்ளமுடியாது, ஸஹீஹ் முஸ்லிமில் இயற்கை மரபுகள் பத்து என்பதாகவும் வந்துள்ளது.

இவ்விடயங்களில் அலட்சியமின்றி, கவனமெடுத்து செயல்படுவது அவசியமாகும்.

கண்ணியமான இந்த ஐந்து விடயங்களும் அல்லாஹ் நேசித்து, ஏவக்கூடிய அவனது இயற்கை மரபுகளிலுள்ளவையாகும். மேலும் ஆரோக்கியமான உணர்வுள்ளவர்களை இவ்விடயங்களின் பால் ஈர்த்ததுடன், இதற்கு மாற்றமான நிலையை விட்டும் அந்நியப்படுத்தியுள்ளான்.

இஸ்லாம் சுத்தம், அழகு, பூரணம் அனைத்தையும் கொண்டு வந்துள்ளது.

இவ்விடயங்களைக் கடைபிடிப்பதால் பலவிதமான ஆன்மீக, லௌகீக பயன்பாடுகள் உள்ளன. அழகிய தோற்றம், உடற்சுத்தம், ஆன்மீக சுத்தத்திற்கான பேணுதல், நிராகரிப்பாளர்களின் அடையாளங்களுக்கு மாறுசெய்தல், இறைக்கட்டளையை எடுத்து நடத்தல் போன்றன அவற்றில் சில பயன்பாடுகளாகும்.

தற்காலத்தில் சில இளைஞர், யுவதிகள் நகங்களை நீள வளர்த்தல், வாலிபர்கள் மீசையை வளர்த்தல் போன்றன மர்க்க ரீதியில் தடுக்கப்பட்டதாகவும், பகுத்தறிவு, உணர்வு ரீதியில் அசிங்கமானதாகவும் உள்ளன. இஸ்லாம் அனைத்து அழகிய விடயங்களையும் ஏவாமலில்லை, அனைத்து அசிங்கங்களையும் தடுக்காமலில்லை, எனினும் ஐரோப்பியர் மீதான குருட்டுப் பின்பற்றுதல் உண்மைகளைப் புரட்டிப்போட்டு விட்டது, அசிங்கத்தை அழகாகக் காட்டி விட்டது. உணர்வு, அறிவு, மார்க்க ரீதியான அழகான விடயங்களை விட்டும் அந்நியப்படுத்தி விட்டது.

التصنيفات

இயல்பாக பேணவேண்டிய சுன்னாக்கள்