إعدادات العرض
' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'
' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'
நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : ' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ Deutsch 日本語 پښتو Tiếng Việt অসমীয়া Shqip Svenska Čeština ગુજરાતી Yorùbá සිංහල دری Кыргызча or Kinyarwanda नेपाली Română Lietuvių Nederlands Soomaali Српски Українська ಕನ್ನಡ Wolof Moore ქართული Azərbaycan Magyar mr Македонски አማርኛ Malagasyالشرح
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையின் நிபந்தனைகளின் ஒன்றான சுத்தம் பற்றி தெளிவு படுத்துகிறார்கள். எனவே தொழுகையை நிறைவேற்ற நாடும் ஒருவருக்கு வுழுவை முறிக்கும் காரியங்களான மலம் அல்லது சலம் அல்லது தூக்கம் போன்ற விடயங்கள் ஏதும் ஏற்பட்டால் அவர் வுழு செய்து கொள்வது கடமையாகும்.فوائد الحديث
தொடக்கு ஏற்பட்ட ஒருவரின் தொழுகையானது, அவர் பெருந்தொடக்குடையவராக இருந்தால் குளித்து சுத்தமாவதன் மூலமும், சிறு தொடக்குடையவராக இருப்பின் அவர் வுழு செய்வதன் மூலமுமே அங்கீகரிக்கப்படுகிறது.
வுழு என்பது: நீரை எடுத்து வாயில் இட்டு நன்றாக அலம்பி அதனை கொப்பளித்தல். பின் நீரை மூச்சால் நாசியினூடாக அடிப்பகுதி வரை உள்ளிழுத்து அதனை சிந்தி வெளியேற்றல். பின் முகத்தை மூன்று தடவைகள் கழுவுதல், பின் இருகைகளையும் முன்னங்கையுட்பட மூன்று தடவைகள் கழுவுதல். பின் தலை முழுவதையும் ஒரு தடவை தடவுதல்; -ஈரக்கையால்- மஸ்ஹ் செய்தல், பின் கரண்டைக் கால் உட்பட இருகால்களையும் மூன்று தடவைகள் கழுவுதல்.
التصنيفات
வுழூ