إعدادات العرض
பள்ளிக்குள் நுழையும் போது : ''அஊது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வஸுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைய்தானிர்…
பள்ளிக்குள் நுழையும் போது : ''அஊது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வஸுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைய்தானிர் ரஜீம்''
அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது : ''அஊது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வஸுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைய்தானிர் ரஜீம்'' என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்;. இதனை நபியவர்கள் கூறினார்களா? என்று கேட்டதற்கு ஆம் என்று நான் கூறினேன். இந்தப் பிரார்த்தனையை கூறினால் இந்நாள் முழுவதும் என்னிடமிருந்து பாதுகாப்புப் பெறுகிறான் என்று ஷைத்தான் கூறுகிறான். திக்ரின் பொருள் : மகத்துவம் கொண்ட அல்லாஹ்வைக் கொண்டும், அவனது அழகிய திருமுகத்தைக் கொண்டும்,நிலையான மேலாதிக்கத்தைக் கொண்டும், விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Kurdî Português සිංහල Русский অসমীয়া Kiswahili Tiếng Việt ગુજરાતી Nederlands پښتو नेपाली മലയാളം Кыргызча Română Svenska Српски తెలుగు ქართული Moore Magyar Македонски Čeština Українська Azərbaycan Wolof Kinyarwanda Malagasy ไทย मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ ភាសាខ្មែរ Lietuvių Deutsch ಕನ್ನಡ Oromoo Shqipالشرح
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது மேற் குறிப்பிட்ட திக்ரை கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் அதன் விளக்கம் பின்வருமாறு: (أعوذ بالله العظيم) 'அஊது பில்லாஹில் அழீம்' என்றால் அல்லாஹ்வைக் கொண்டும் அவனின் பண்புகளைக் கொண்டும் நான் புகழிடம் தேடி பாதுகப்பும் கோருகிறேன். (وبوجهه الكريم) வபிவஜ்ஹிஹி கரீம் என்றால் : பெரும் கொடையாளானாகிய அவனின் திருமுகத்தைக் கொண்டும் என்று பொருளாகும். (وسلطانه) வஸுல்தானிஹி என்றால் (அவனின் அதிகராம்) அதாவது அவனின் மேலான்மை மற்றும் வல்லமை மற்றும் அதிகாரம் அவன் விரும்பும் எந்தப்படைப்பின் மீதும் இருக்கும் என்பதாகும். (القديم) (அல் கதீம்) என்பது நித்தியமான முடிவே இல்லாத தொன்று தொட்டே உள்ள என்று பொருளாகும். (من الشيطان الرجيم) 'மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்பது அல்லாஹ்வின் கருணையிலிருந்து விரட்டப்பட்டு தூரமாக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து என்பதாகும். இதன் கருத்து : யா அல்லாஹ் : ஷைத்தானின் தீய ஊசாலட்டத்திலிருந்தும், அவனின் தூண்டுதல் களிலிருந்தும்,அவனுடைய அடிச்சுவடு களிலிருந்தும், அவனுடைய தீய எண்ணங்களிலிருந்தும், அவனுடைய வழிகேட்டிலிருந்தும், தீய விஷயங்களை எனக்குக் கவர்ச்சிகரமானதாகக் காட்டுவதிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக.அவனே வழிகேட்டிற்கும் அறியாமைக்கும் தூண்டுபவனும் ஆவான். அப்துல்லாஹ்; இப்னு அம்ர் (ரழி) அவர்களிடம்; ஒருவர், 'நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இதை மாத்திரமா சொன்னார்கள்?' என்று கேட்டார். என்றார். அதற்கு அவர், 'ஆம்' என் கூறினார். ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்போது இந்த துஆவை ஓதினால், இந்த துஆவை ஓதிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் நுழைந்த இந்த மனிதர் என்னிடமிருந்து இரவும் பகலும் பாதுகாப்புப் பெற்றுள்ளார் என்று ஷைத்தான் கூறுவான்.فوائد الحديث
பள்ளிக்குள் நுழையும் போது ஹதீஸில் குறிப்பிடப்பட்ட இந்த பிரார்த்தனையை ஓதுவதன் சிறப்பு. அது அவரை ஷைத்தானிடமிருந்து நாள் முழுவதும் பாதுகாக்கிறது.
ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருத்தல் அவன் எப்போதும் முஸ்லிம்களை வழிதவறச் செய்து தீயவிடயங்களின் பால் தூண்டி வழிகெடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறான்.
இந்த துஆவின் மூலம் ஒரு மனிதனுக்கு அவனின் உள்ளத்தில் காணப்படும் அல்லாஹ்வில் கொண்ட விசுவாசம் மற்றும் தூய்மையின் அடிப்படையிலும், அல்லாஹ்வின் வாக்குறுதியின் மீதுள்ள ஆழமான நம்பிக்கையின் அடிப்படையிலும் ஷைத்தானின் வழிகேட்டிலிருந்தும் அவனின் தூண்டுதல்களிருந்தும் பாதுகாப்புக் கிடைக்கிறது.
