யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்

யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறயதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

மார்க்க மற்றும் உலக விவகாரங்களில்; மென்மையாக நடந்து கொள்ளும் பண்பை இழந்தவருக்கு தோல்வியே கிட்டும். அது தன்னோடு தொடர்பான மற்றும் பிறருடன் தொடர்பான விவகாரங்களை கையாள்வதாத இருந்தாலும் அவை அனைத்திலும் நன்மைகள்; இழக்கப்பட்டவராகவே அவர் காணப்படுவார்.

فوائد الحديث

மென்மையின் சிறப்பு அதனை பண்பாக கொள்வதை ஊக்கப்பத்தியிருத்தல், கடுமையும் வன்மமும் கண்டிக்கப்பட்டிருத்தல்.

மென்மையானது மூலமே ஈருலக நலன்களும்; ஒழுங்கு பெற்று விரிவடைய துணைபுரிகிறது அதே வேளை கடுமையும் வன்மமும் அவைகளுக்கு எதிரானது.

மென்மையானது, நற்குணம் மற்றும் அமைதி; ஆகியவற்றின் விளைவால் ஏற்படுவதாகும். (கடுமையானது)வன்மமானது கோபம் மற்றும் முரட்டுத்தனத்தின் விளைவால் ஏற்படுவதாகும். இதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மென்மையை பாராட்டி மிகைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார்கள்.

ஸுஃப்யான் அஸ்ஸவ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது தோழர்களிடம், மென்மை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது விடயங்களை அவற்றிற்குரித்தான இடங்களில் வைப்பதாகும்: கடுமையை அதற்குரிய இடத்திலும், மென்மையை அதற்குரிய இடத்திலும், வாளை அதற்குரிய இடத்திலும், சாட்டையை அதற்குரிய இடத்திலும் வைப்பதை குறிக்கும் என்று கூறினார்கள்.

التصنيفات

நற்குணங்கள்