إعدادات العرض
வெட்கம் ஈமானைச் சார்ந்தது.
வெட்கம் ஈமானைச் சார்ந்தது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுகின்றார்கள் : "வெட்கம் ஈமானைச் சார்ந்தது".
[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහල Kurdî Hausa Português മലയാളം తెలుగు မြန်မာ ไทย Deutsch 日本語 پښتو অসমীয়া Shqip Svenska Čeština ગુજરાતી አማርኛ Yorùbá Nederlands ئۇيغۇرچە Kiswahili دری Fulfulde Magyar ಕನ್ನಡ Кыргызча Lietuvių or Română Kinyarwanda Српски O‘zbek Moore नेपाली Oromoo Wolof Soomaali Български Українськаالشرح
வெட்கம் ஈமானைச் சார்ந்தது என்று சொல்லக் காரணம் வெட்கமுடையவன் வெட்கத்தின் காரணமாக பாவ காரியங்களை விட்டும் தவிர்ந்து தன் கடமைகளில் ஈடுபடுவான் என்பதே.இது அல்லாஹ்வின் மீதுள்ள ஈமானின் விளைவே.அடியானின் மனதில் ஈமான் நிரம்புகின்ற போது அது அவனை பாவ காரியங்களை விட்டும் தடுத்துவிடும். மேலும் கடமையில் ஈடுபடும்படி அது அவனைத் தூண்டும்.எனவே அது அடியான் மீது செலுத்தி வரும் இந்த பயன் தரும் தாக்கத்தின் அடிப்படையில் வெட்கம் ஈமானின் தரத்தைப் பெற்றுவிட்டது.فوائد الحديث
வெட்கம் என்ற பண்பைக் கடைபிடித்தல், அது ஈமானின் ஒரு கிளையாகும்.
வெட்கம் நல்லதைச் செய்யவும், தீயதைத் தவிர்ந்து கொள்ளவும் உந்து சக்தியாக உள்ளது.
நல்லவற்றிக்கு தடையாக இருப்பதற்கு வெட்கம் எனப்பட மாட்டாது, மாறாக அது தயக்க மனப்பான்மை, இயலாமை, இழிவு, பலவீனம், கோழைத்தனம் ஆகியவற்றின் அறிகுறியாகும்.
ஏவல்களை எடுத்து நடந்து, விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதன் மூலம் அல்லாஹ்வின் விடயத்தில் வெட்கம் ஏற்பட வேண்டும். மக்களை மதித்து, அவர்களது தரத்திற்கேற்ப அவர்களை வைப்பதன் மூலம் படைப்பினங்கள் விடயத்திலும் வெட்கம் ஏற்பட வேண்டும்.
التصنيفات
நற்குணங்கள்