'நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும். மேலும் நிச்சயமாக நன்மை…

'நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும். மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும். மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் . மேலும் மனிதன் உண்மை பேசிக் கொண்டும் உண்மையைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அவன் அல்லாஹ்விடம் உண்மையாளன் என்று எழுதப்படுவான். நீங்கள் பொய் சொல்வதையிட்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் நிச்சயமாகப் பொய் தீமைக்கு வழிகாட்டும். மேலும் நிச்சயமாக தீமை நரகிற்கு வழிகாட்டும். எனவே மனிதன் பொய் பேசிக் கொண்டும் பொய்யைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அல்லாஹ்விடம் அவன் பொய்யன் என்று எழுதப்படுவான்'

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்மை பேசுமாறு வலியுறுத்துகிறார்கள். அவ்வாறு உண்மை பேசுவதை கடைப்பிடிப்பதும் நிலையான நற்காரியங்களை செய்யவும் நற்செயல்களை தொடராக செய்யவும் வழிவகுப்பதோடு அவரை சுவர்கத்தின் பால் கொண்டு போய்சேர்க்கும். இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தொடராக இப்பண்பை கடைப்பிடிப்பவர் உண்மையாளர் என்ற பெயருக்கு தகுதிபெற்றவராக மாறி விடுகிறார். அரபு மொழியில் சித்தீக் என்பது மிகப்பெரும் உண்மையாளர் என்ற கருத்தைக் காட்டும் ஒரு சொல்லாகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பொய் மற்றும் வீணாண வார்த்தை பேசுவதை விட்டும் எச்சரிக்கை செய்தார்கள். ஏனெனில் இச்செயற்பாடானது மார்க்கத்தில் உறுதியாக இருப்பதை விட்டு தடம்புரள தூண்டுவதோடு தீமைகளையும் பாவங்களையும் குழப்பங்களை செய்யயவும் வழிவகுக்கும். பின் இவை நரகத்திற்கு கொண்டுபோய் சேர்த்துவிடும். ஒருவர் தொடர்ந்தும் அதிகமாக பொய் சொல்பவராக இருக்கும் பட்சத்தில் அவர் பொய்யர் என அல்லாஹ்விடத்தில் பதிவு செய்யப்படுகிறார்.

فوائد الحديث

உண்மை பேசுதல் சிறந்த ஒரு குணமாகும். அதனை முயற்சி மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் அடைந்திட முடியும். ஒருவர் உண்மை பேசுபவராகவும்; எல்லா நிலைகளிலும் உண்மையை தேடக்கூடியவராகவும் இருப்பாராயின், உண்மை பேசுவது என்பது அவரின் இயல்பாகவும் சுபாவமாகவும் மாறிவிடும். இதன் காரணமாக அல்லாஹ்விடத்தில் அவர் உண்மையாளர்கள் மற்றும் சான்றோர்களில் ஒருவராக பதிவு செய்யப்படுவார்.

பொய் இழிவான ஒரு குணமாகும். இதனை ஒரு மனிதன் நீண்ட கால பயிற்சியினூடாக பெற்றுக் கொள்கிறான், வேண்டுமென்றே சொல் மற்றும் செயலில் இப்பண்பை கடைபிடிப்பதினால் அவனின் குணத்திலும் இயல்பிலும் ஆழமாக பதிந்து விடுகிறது. ஆகையால் அவன் எப்போதும் பொய் பேசுபவனாக மாறிவிடுகிறான். இவ்வாறான நிலையில் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களில் ஒருவனாக பதியப்படுகிறான்.

உண்மை என்பது பேச்சில்; நேர்மையைக் குறிக்கிறது, மேலும் அது பொய் சொல்வதற்கு எதிரானது. எண்ணத்தில் (நோக்கத்தில்) நேர்மை –உண்மை என்பது உளத்தூய்மையாகும். ஒரு நல்ல காரியத்தை செய்வதில் உறுதியாக இருப்பதில் உண்மையை கடைப்பிடிப்பதும் செயல்களில் உண்மையாக நடப்பதும் இதில் உண்மை என்ற குணத்தில் அடங்கும். அத்துடன் இது விடயத்தில் உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பது உண்மையை கடைப்பிடிப்பதில் உள்ள ஆகக் குறைந்த நிலையாகும். அல்லாஹ்வுக்கு பயப்படுதல் எதிர்பார்த்தல் போன்ற விடயங்களில் உண்மையாக நடந்து கொள்வது உயர் நிலையாகும். கூறப்பட்ட விடயங்கள் அனைத்திலும் உண்மையை கடைப்பிடிப்பவர் ஸித்தீக் அல்லது இவற்றில் சில விடயங்களில் உண்மையாக நடப்பாராயின் ஸாதிக் என்ற நிலையில் இருப்பார்.

التصنيفات

நற்குணங்கள்