إعدادات العرض
உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அது ஏதுவென வினவப்பட்ட போது முகஸ்துதி எனக்…
உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அது ஏதுவென வினவப்பட்ட போது முகஸ்துதி எனக் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அது ஏதுவென வினவப்பட்ட போது முகஸ்துதி எனக் கூறினார்கள்".
الترجمة
عربي বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ Deutsch 日本語 پښتو Tiếng Việt অসমীয়া Shqip Svenska cs ગુજરાતી አማርኛ Yorùbá සිංහල ไทย دری Кыргызча or rw so नेपाली roالشرح
நபியவர்கள் எம்மைப் பற்றி அஞ்சுவதாக இந்நபிமொழியில் கூறுகின்றார்கள். சிறிய இணைவைப்பு ஏற்படுவதையே அதிகமாக அவர்கள் அஞ்சுகின்றார்கள். ஏனெனில் இது தமது சமூகத்தின் மீது அன்னார் கொண்ட அதீத அன்பு, கருணை, அவர்களை சீர்திருத்துபவற்றின் மீதான அன்னாரின் ஆர்வம், சிறிய இணைவைப்பிற்கான காரணியான முகஸ்துதியின் வீரியம், அதன்பால் இட்டுச் செல்லும் அதிக வழிகள் இவற்றை அன்னார் அறிந்து வைத்திருந்ததாலுமே இவ்வாறு அஞ்சுகின்றார்கள். சில வேளை முஸ்லிம் அறியாமலேயே அது ஊடுறுவி, தீங்கு விளைவிக்கும், இதனால்தான் அவர்களை இதனை விட்டும் எச்சரிக்கை செய்து, அச்சுறுத்தினார்கள்.فوائد الحديث
தஜ்ஜாலின் குழப்பத்தை விட நல்லடியார்களிடத்தில் மிக அஞ்சப்படுவது முகஸ்துதியாகும்.
முகஸ்துதி உட்பட பொதுவாக இணைவைப்பை விட்டும் எச்சரிக்கை செய்தல்.
நபி (ஸல்) அவர்கள் தமது சமூகத்தின் மீது கொண்டுள்ள அதீத பரிவு, அவர்களது நேர்வழியில் உள்ள ஆவல், அவர்களுக்கு நலவுநாடுதல் போன்றன இந்நபிமொழியில் வெளிப்படுகின்றன.
இணைவைப்பு பெரியது, சிறியது என இரு வகைப்படுகின்றது. அல்லாஹ்வுக்கென தனித்துவமாக உள்ள விடயங்களில் இன்னொருவரை அவனுடன் சமப்படுத்துவதே பெரிய இணைவைப்பாகும். வஹீயில் இணைவைப்பு எனப் பெயரிடப்பட்டு, பெரிய இணைவைப்பின் அளவிற்குச் செல்லாத விடயங்களே சிறிய இணைவைப்பாகும். இரண்டிற்குமிடையில் பின்வரும் வேறுபாடுகள் உள்ளன : 1. பெரிய இணைவிப்பினால் அனைத்து நற்செயல்களும் அழிந்து விடும், சிறிய இணைவைப்பினால் அது கலந்த குறித்த செயல் மாத்திரமே அழியும். 2. பெரிய இணைவைப்பு நரகில் நிரந்தரமாக்கி விடும், சிறிய இணைவைப்பு நரகில் நிரந்தரமாக்கி விடாது. 3. பெரிய இணைவைப்பின் மூலம் உரியவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார், சிறிய இணைவைப்பின் மூலம் இஸ்லாத்தை விட்டும் வெளியேற மாட்டார்.