பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'

பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்தாக அந் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'. என்று கூறிவிட்டு ஸுறா காஃபிரின் 60வது வசனத்தை ஓதினார்கள் : ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன்.எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக் கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தினுள் நுழைவார்கள்".

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد]

الشرح

பிரார்த்தனை வணக்கமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அந்தப் பிரார்த்தனை அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று தூய்மையுடனும் இதயச்சத்துடனும் இருத்தல் வேண்டும். துஆவானது தேவையை முன்னிருத்திக் கேட்பதாகவோ, அல்லது கோரிக்கையொன்றை முன்னிருத்திக்கேட்பதாகவோ இருக்கலாம். அதாவது அல்லாஹ்விடம் அவனுக்கு பயனுள்ளதை தருமாறும், இம்மையிலும் மறுமையில் அவனுக்கு தீங்காக அமைபவற்றை விட்டும் பாதுகாக்குமாறும் வேண்டுவதாகும். அல்லது வணக்கம் எனும் பிரார்த்தனை அதாவது அல்லாஹ் விரும்பி திருப்தியடையக்கூடிய வெளிப்படையானதும் மறைமுகமானதுமான வார்த்தைகள் செயல்கள் மற்றும் உள்ளத்தால் அல்லது உடலால் அல்லது பணத்தால் செய்யக் கூடிய அனைத்தையும் குறிக்கும். பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இதற்கான ஆதாரமான பின்வரும் அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக குறிப்பட்டார்கள் : ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தினுள் நுழைவார்கள்".

فوائد الحديث

பிரார்த்தனை இபாதத்தின் அடிப்படையாகும். எனவே அல்லாஹ் அல்லாத வேரொன்றிற்கு திருப்புவது கூடாது.

பிரார்த்தனை அடிமைத்துவத்தின் யதார்த்தத்தையும், இரட்சகனின் நிறைவான தன்மையையும் அவனின் வல்லமையையும் ஏற்றுக்கொள்வதுடன், அடியான் அவனின் பால் தேவையுடையவன் என்பதையும் இது பிரதிபளிக்கிறது.

அல்லாஹ்வை வணங்குதில் கர்வத்துடன் இருப்பதற்காகவும், அவனிடம் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதற்குமான கூலி அவர்கள், இழிவடைந்த அட்பர்களாக நரகினுள் நுழைவதே! இது அல்லாஹ்வின் விடயத்தில் கர்வம் கொண்டு இருப்போருக்கான கடுமையான எச்சரிக்கையாகும்.

التصنيفات

பிரார்த்தனையின் சிறப்புகள்