إعدادات العرض
அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன். உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே…
அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன். உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன். உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்".
الترجمة
عربي বাংলা Bosanski English Español فارسی Bahasa Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी Français Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili සිංහල မြန်မာ Русский Deutsch 日本語 پښتو Tiếng Việt অসমীয়া Shqip Svenska cs ગુજરાતી አማርኛ Yorùbá Nederlands ئۇيغۇرچە ไทย دری ff hu it kn Кыргызча Lietuvių or ro rw so Српски uz mos नेपालीالشرح
உண்மையான வலிமை உடல், தசைகள் வலிமையல்ல, எப்போதும் சக்திவாய்ந்தோரை வீழ்த்துபவனல்ல உண்மையான பலசாலி கோபம் கடுமையாகும் போது தன்னைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவனே உண்மையான பலசாலி. ஏனெனில் இது அவனிடமுள்ள ஷைத்தானை மிகைத்து, தன்னைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பறைசாற்றுகின்றது.فوائد الحديث
சகிப்புத் தன்மையின் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்".
எதிரிகளுடன் போராடுவதை விட கோபத்தின் போது ஆன்மாவுடன் போராடுவது மிகக் கடுமையானதாகும்.
வலிமை பற்றிய அறியாமைக் கால எண்ணக்கருவை இஸ்லாம் ஒரு தனித்துவமான முஸ்லிம் ஆளுமையை உருவாக்கும் கண்ணியமான பண்பாக மாற்றியுள்ளது. எனவே மக்களில் மிகவும் வலியானவர் தன்னை கட்டுப்பாட்டில் வைத்து, ஆன்மாவை அதன் ஆசைகளிலிருந்து விலக்கியவராவார்.
உடலியல், ஆன்மா, சமூகவியல் ரீதியான பல தீங்குகள் கோபத்தில் இருப்பதால் அதனை விட்டும் தூரமாவது அவசியமாகும்.
கோபம் என்பது சுய கட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களைத் தொலைக்கக் கூடிய ஒரு மனித பண்பாகும்.