إعدادات العرض
ஆதமின் மகனே! நீர் செலவு செய். உமக்கு செலவிடப்படும். என்று அல்லாஹ் கூறினான்.
ஆதமின் மகனே! நீர் செலவு செய். உமக்கு செலவிடப்படும். என்று அல்லாஹ் கூறினான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா அப்துர்ரஹ்மான் இப்னு ஸஹ்ர் அல் தௌஸீ (ரலி) கூறுகின்றார்கள் : "ஆதமின் மகனே! நீர் செலவு செய். உமக்கு செலவிடப்படும். என்று அல்லாஹ் கூறினான்".
[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහල Kurdî Hausa Português മലയാളം తెలుగు မြန်မာ ไทย Deutsch 日本語 پښتو অসমীয়া Shqip Svenska Čeština ગુજરાતી አማርኛ Yorùbá Nederlands ئۇيغۇرچە Kiswahili دری Magyar Italiano ಕನ್ನಡ Кыргызча Lietuvių Malagasy Română Kinyarwanda नेपाली Српски Soomaali Moore Українська Българскиالشرح
"செலவு செய் உம்மீது செலவிடப்படும்" அதாவது செலவு செய்வதன் மூலம், பணத்தை வெளியற்றுவதன் மூலம் வறுமை வந்து விடும் என்று பயப்படாதே. மேலும் கஞ்சனாக ஆகிவிடாதே. நீ மற்றவருக்கு தர்மம் செய்தால் அல்லாஹ் உனக்கு வாரி வழங்குவான். ஏனெனில் உங்களிடம் இருப்பது தீர்ந்து போகும். அல்லாஹ்விடம் இருப்பது நிலைத்திருக்கும். மேலும் இந்த ஹதீஸ் "நீங்கள் எதை தானம் செய்த போதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான்" (34:39) எனும் இறை வாக்கின் கருத்தைக் கொண்டுள்ளது. இவ்வாறு நல்ல கருமங்களில் செலவு செய்யும் படி இந்த ஹதீஸ் மக்களைத் தூண்டுகின்றது. மேலும், அதற்கு அல்லாஹ்வின் அருள் மூலம் பிரதி வழங்கப்படும் என்ற சுப செய்தியையும் அது உள்ளடக்கியுள்ளது.فوائد الحديث
செலவு செய்தல் வாழ்வாதாரம் விருத்தியடைவதற்கான காரணமாகும்.
அடியான் வறியவர்கள், மற்றும் தேவையுடையோருக்கு செலவு செய்யும் அளவிற்குத் தான் அல்லாஹ்வும் அவனுக்கு வழங்குவான்.
அல்லாஹ்வின் பொக்கிஷம் அழியாது, நிரம்பிவழியக் கூடியது, அவன் தயாளன், செலவு செய்ய அஞ்சி பதுக்கிக் கொள்ள மாட்டான்.