إعدادات العرض
'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம்…
'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம் ஏற்பட்டால், அவர் சத்தத்தைக் கேட்காத அல்லது காற்று வெளியேறியதாக உணராத வரை (தொழுகையை முறித்து) பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம் ஏற்பட்டால், அவர் சத்தத்தைக் கேட்காத அல்லது காற்று வெளியேறியதாக உணராத வரை (தொழுகையை முறித்து) பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம்.
الترجمة
العربية English မြန်မာ Svenska Čeština ગુજરાતી Yorùbá Nederlands اردو Bahasa Indonesia ئۇيغۇرچە বাংলা Türkçe සිංහල हिन्दी Tiếng Việt Hausa తెలుగు Kiswahili پښتو অসমীয়া دری Кыргызча Lietuvių Kinyarwanda नेपाली മലയാളം Bosanski ಕನ್ನಡ Kurdî Română Soomaali Shqip Српски Українська Wolof Tagalog Moore Azərbaycan فارسی ქართული 中文 Magyar Português Deutsch Русский Македонски bm አማርኛ Malagasy Oromoo ភាសាខ្មែរالشرح
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுபவருக்கு வயிற்றில் ஏதாவது ஏற்பட்டு காற்று வெளியேறியதா இல்லையா என்ற குழப்பம் -தடுமாற்றம் ஏற்பட்டால் வுழுவை முறிக்கக் கூடிய தொடக்கு ஏற்பட்டுள்ளது என உறுதியாக அறியும் வரையில் அவர் தனது தொழுகையை விட்டுவிட்டு மீண்டும் வுழு செய்வதற்காக செல்ல வேண்டாம் என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அவர் அவ்வாறு தொழுகையை முறித்துக் கொள்வதற்கு காற்றின் சப்தத்தையோ அல்லது காற்றின் நாற்றத்தையோ நுகர வேண்டும். காற்று வெளியேற வில்லை என உறுதியான நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் சந்தேகம் அவரின் உறுதியை பாதிக்கமாட்டாது. இந்த அடிப்படையில்; அவர் சுத்தமாக இருக்கிறார் என்ற நம்பிக்கையே முதன்மைப்படுத்தப்படும். தொடக்கு ஏற்பட்டது என்ற இடையில் ஏற்பட்ட சந்தேகமானது உறுதியற்றது என்பதனால் அதனை விட்டு விட வேண்டும்.فوائد الحديث
இந்த ஹதீஸானது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் சட்டவாக்க விதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகின்ற ' இடையில் ஏற்பட்ட ஒரு சந்தேகம் ஏலவே உள்ள உறுதியான முடிவை மாற்றாது' என்ற விதியை உள்ளடக்கியுள்ளது. அடிப்படை-மூலம் என்பது அதற்கு முரணான ஒன்று உறுதியானது என்று நிரூபிக்கப்படும் வரையில் அதே நிலையில் இருக்கும்.
தொழுபவர் தனக்கு தொடக்கு ஏற்படவில்லை என்ற உறுதியோடு இருக்கும் வரையில் சந்தேகம் வுழு முறியாது தூய்மையாக இருத்தல் என்பதில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்திட மாட்டாது.