إعدادات العرض
'இரக்கமுள்ளவர்களுக்கு அர்ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்,…
'இரக்கமுள்ளவர்களுக்கு அர்ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்'
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'இரக்கமுள்ளவர்களுக்கு அர்ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்'.
[ஸஹீஹானது-சரியானது]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ ไทย Deutsch 日本語 پښتو Tiếng Việt অসমীয়া Shqip Svenska Čeština ગુજરાતી Yorùbá Nederlands සිංහල دری Кыргызча Lietuvių Kinyarwanda नेपाली or ಕನ್ನಡ Oromoo Română Soomaali Српски Wolof Українська Moore Azərbaycan ქართული Magyar Македонски bm አማርኛالشرح
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறருக்கு இரக்கம் காட்டுவோருக்கு அருளாளனாகிய அல்லாஹ் ஏகமெல்லாம் வியாபித்திருக்கும் அவனின் கருணையின் மூலம் நிறைவான கூலியை வழங்குகிறான் எனத் தெளிவுபடுத்துகிறார்கள். பின்னர் அவர்கள் இவ்வுலகிலுள்ள மனிதன் அல்லது மிருகம் அல்லது பறவை இவையல்லாத உயிரினங்கள் அனைத்திற்கும் கருணை காட்டுமாறு கட்டளைப்பிரப்பிக்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கான கூலி, கருணை காட்டுவோருக்கு அல்லாஹ் ஏழுவானங்களுக்கு மேலிருந்து அருள்,கருணை புரிவதே என குறிப்பிடுகிறார்கள்.فوائد الحديث
இஸ்லாம் மார்க்கம் கருணையின் மார்க்கமாகும். அது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல் மற்றும் உயிரினங்களுக்கு நன்மை புரிதல் என்பவற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கருணை, இரக்கம் எனும் பண்புக்குரித்தானவன். அவன் தூய்மையானவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். தனது அடியார்களுக்கு அருளை, கருணையை வழங்குபவன்.
செயலின் தன்மைக்கேட்ப அதே போன்ற கூலி கிடைத்தல். அந்த வகையில் இரக்கம் காட்டுவோருக்கு அல்லாஹ்வும் இரக்கம் காட்டுகிறான்.