إعدادات العرض
ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களைத் தவிர்ந்து…
ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.".
[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
الترجمة
عربي বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी සිංහල Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ Deutsch 日本語 پښتو Tiếng Việt অসমীয়া Shqip Svenska cs ગુજરાતી አማርኛ Yorùbá Nederlands ئۇيغۇرچە ไทย دری bg ff hu it kn Кыргызча Lietuvių mg or ro rw Soomaali тоҷикӣ uz ak नेपाली mos az woالشرح
ஐவேளை தொழுகையும் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது. பெரும் பாவங்களுக்கு அது குற்றப்பரிகாரமாக ஆகுவதில்லை. அவ்வாறே ஜும்ஆத் தொழுகையும் அதையடுத்து வரும் ஜும்ஆவுக் கிடையிலுள்ளவைகளும் ரமழான் நோன்பு அடுத்த ரமழான் வரையும் பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும் காலமெல்லாம் (சிறு) பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்துவிடுகிறது.فوائد الحديث
மேற்கண்ட கடமைகளைச் சரிவரச் செய்வது அவற்றுக்கு இடையே ஏற்பட்ட பாவங்களை அல்லாஹ் தனது கருணை, சிறப்பின் மூலம் மன்னிப்பதற்குக் காரணமாகின்றது.
பாவங்கள் பெரியவை, சிறியவை என இரு வகைப்படுகின்றன.