إعدادات العرض
'(இஸ்லாமிய அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று…
'(இஸ்லாமிய அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைதூரமளவிற்கு வீசிக் கொண்டிருக்கும்'
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள்: '(இஸ்லாமிய அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைதூரமளவிற்கு வீசிக் கொண்டிருக்கும்'.
الترجمة
العربية Bosanski English فارسی Français Русский हिन्दी Bahasa Indonesia 中文 বাংলা اردو Español Kurdî Português മലയാളം తెలుగు Kiswahili සිංහල မြန်မာ ไทย 日本語 پښتو Tiếng Việt অসমীয়া Shqip Svenska Čeština ગુજરાતી Yorùbá Nederlands ئۇيغۇرچە Türkçe Hausa دری Кыргызча Lietuvių Kinyarwanda नेपाली or ಕನ್ನಡ Oromoo Română Soomaali Српски Wolof Українська Tagalog Moore Azərbaycan ქართული Magyar mr Deutsch Македонски bm አማርኛالشرح
பாதுகபாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில்; இஸ்லாமிய அரசின் கீழ் வாழும்; முஸ்லிமல்லாத பிரஜை ஒருவரை தகுந்த காரணமின்றிக் கொன்றவன் சுவர்க்கத்தின் வாடையை நுகர மாட்டடான் என்ற கடுமையான எச்சரிக்கையை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துவதுடன் அதன் நறுமணமானது நாற்பதாண்டுப் பயணத் தொலைவுவரை வீசிக் கொண்டிருக்கும என்றும் குறிப்பிடுகிறார்கள்.فوائد الحديث
ஒப்பந்தப் பிரஜை, திம்மி,(இஸ்லாமிய அரசினுள் வாழும் காபிர்) அடைக்கலம் தேடிவந்தவர் ஆகியோரை கொல்வது ஹராமாகும், அது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
முஆஹித் என்பவர் : காபிர்களில் முஸ்லிம் அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டவர், அவர் தனது நாட்டில் இருப்பார், அவர் முஸ்லிம்களுக்கு எதிராக போரிட மாட்டார் அவருக்குகெதிராக போர்த்தொடுக்கவும் கூடாது. திம்மி என்பவர் இஸ்லாமிய நாட்டில் வரி செலுத்தி வாழ்ந்துவருபவர், முஸ்தஃமன் என்பவர்; குறிப்பிட்ட காலத்திற்கு இஸ்லாமிய நாட்டில் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாழ்பவர்.
முஸ்லிம் அல்லாதோருடன் செய்த உடன்படிக்கைக்கு துரோகம் செய்வது எச்சரிக்கப்பட்டிருத்தல்.