إعدادات العرض
பிலாலே தொழுகைகாக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்
பிலாலே தொழுகைகாக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்
ஸாலிம் இப்னு அபுல் ஜஃத் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் நான் தொழுது ஓய்வு பெற்றால் சிறப்பாயிருக்குமே! என்று கூற அங்கிருந்தவர்கள் இதனை குறையாகப் பார்த்தார்கள் இதற்கு அவர், தான் அல்லாஹ்வின் தூதர் கூறுவதை செவிமடுத்துள்ளேன். பிலாலே தொழுகைகாக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]
الترجمة
العربية English မြန်မာ Svenska Čeština ગુજરાતી አማርኛ Yorùbá Nederlands اردو Bahasa Indonesia ئۇيغۇرچە বাংলা Türkçe සිංහල हिन्दी Tiếng Việt Hausa Kiswahili ไทย پښتو অসমীয়া دری Кыргызча Lietuvių Kinyarwanda नेपाली മലയാളം తెలుగు Bosanski Italiano ಕನ್ನಡ Kurdî Oromoo Română Soomaali Shqip Српски Українська Wolof Tagalog Moore Malagasy Azərbaycan فارسی ქართული 中文 Magyarالشرح
நபித் தோழர்களில் ஒருவர் 'நான் தொழுது ஓய்வு பெற்றால் சிறப்பாயிருக்கமே' என்று கூற, அதற்கு அவரை சூழ உள்ளோர் குறைபட்டுக் கொண்டார்கள். அதற்கு அவர், தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை செவிமடுத்தேன் அவர்கள்: நாம் ஆறுதல் பெறுவதற்காக பிலாலே தொழுகைக்கான அதானைக் கூறி இகாமத்தும் கூறுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுடன் உரையாடுவது, ஆன்மாவுமக்கு உள்ளத்திற்குமான நிம்மதி அதிலுள்ளது.فوائد الحديث
தொழுகையில் அல்லாஹ்வுடன் இரகசியமாக உரையாடுதல் காணப்படுவதால் தொழுகையின் மூலம் உள்ளத்திற்கான நிம்மதி கிடைக்கும்.
வணக்கவழிபாடுகளில் ஆர்வமின்மை, அலட்சியம் செய்வோரை கண்டித்தல்.
யார் தனக்குரிய கடமையை நிறைவேற்றுகிறாறோ, அவர் தமக்கு விதிக்கப்பட்ட பொறுப்பிலிருந்து தப்பிவிட்டார். அதன் மூலம் அவருக்கு ஆறுதலும் மற்றும் நிம்மதியுணர்வும் கிடைக்கிறது.