إعدادات العرض
''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''
''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''.
[நம்பகமானது (ஹஸன்)] [இதனை இமாம்களான இப்னுமாஜா, தாரகுத்னி, மற்றும் பலரும் அறிவிப்பாளர் தொடர் அருபடாமல் அறிவித்துள்ளனர்]
الترجمة
العربية Español አማርኛ English اردو Indonesia বাংলা Français Türkçe Русский Bosanski සිංහල हिन्दी 中文 فارسی Tiếng Việt Tagalog Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ ไทย Deutsch پښتو অসমীয়া Shqip Nederlands ગુજરાતી Кыргызча नेपाली Lietuvių دری Српски тоҷикӣ Kinyarwanda Magyar Čeština Moore Malagasy Oromoo ಕನ್ನಡ Wolof Azərbaycan O‘zbek Українська ქართული Македонски ភាសាខ្មែរ Bambara ਪੰਜਾਬੀ मराठी Kirundi Kurmancî Bahasa Melayuالشرح
தனக்கோ பிறருக்கோ ஏற்படுகின்ற எல்லா வகையான தீங்குகளையும் அதன் வெளிப்பாடுகளையும் தடுப்பது கடமையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கை ஏற்படுத்துவதும் கூடாது. அத்துடன் தீங்கை இன்னொரு தீங்கினால் எதிர்கொள்வதும் கூடாது. காரணம் தீங்கிழைத்தல் என்பது அதே மாதிரியான ஒன்றினால் நீங்கி விடாது. ஆனால் அத்துமீறாது பழிக்குப்பழி தண்டனை வழங்குதல் அனுமதிக்கப்பட்டதாகும்.فوائد الحديث
செய்த தீங்கை விட அதிகமாகப் பழிதீர்ப்பது தடுக்கப்பட்டிருத்தல்.
தீங்கை ஏற்படுத்தக் கூடிய எதனையும் அல்லாஹ் தனது அடியார்களுக்கு கட்டளையிடவில்லை.
இந்த ஹதீஸ் தீங்கை தடைசெய்வதில் மிக முக்கிய விதியொன்றை உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் சொல் அல்லது செயல் அல்லது கைவிடல் போன்றவற்றால் தீங்கிழைப்பது தடுக்கப்பட்டதாகும்.
'அல்லரரு யுஸாலு' (தீங்கு நீக்கப்படவேண்டும்) என்பது மார்க்க சட்டவாக்க விதிகளில் ஒன்றாகும், எனவே இஸ்லாமிய மார்க்கமானது தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பதை அங்கீகரிக்காது. அதனை வன்மையாக கண்டிக்கிறது.
