إعدادات العرض
'நான் கொண்டு வந்தவற்றுக்கு (இறைத்தூதுக்கு) ஏற்ப தனது மனோஇச்சை (கட்டுப்பட்டதாக) மாறும் வரை உங்களில் எவரும்…
'நான் கொண்டு வந்தவற்றுக்கு (இறைத்தூதுக்கு) ஏற்ப தனது மனோஇச்சை (கட்டுப்பட்டதாக) மாறும் வரை உங்களில் எவரும் உண்மையாக நம்பிக்கை கொண்டவராக மாட்டார்'
நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, அவர்கள் கூறுகிறார்கள் : 'நான் கொண்டு வந்தவற்றுக்கு (இறைத்தூதுக்கு) ஏற்ப தனது மனோஇச்சை (கட்டுப்பட்டதாக) மாறும் வரை உங்களில் எவரும் உண்மையாக நம்பிக்கை கொண்டவராக மாட்டார்'
الترجمة
العربية Español አማርኛ English اردو Indonesia বাংলা Français Türkçe Русский Bosanski සිංහල हिन्दी 中文 فارسی Tiếng Việt Tagalog Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ ไทย Deutsch پښتو অসমীয়া Shqip Nederlands ગુજરાતી Кыргызча नेपाली Lietuvių دری Српски тоҷикӣ Kinyarwanda Magyar Čeština Moore Malagasy Oromoo ಕನ್ನಡ Wolof Azərbaycan O‘zbek Українська ქართული Македонски ភាសាខ្មែរ Bambara ਪੰਜਾਬੀ मराठी Kirundi Kurmancî Bahasa Melayuالشرح
ஒருவரது ஈமான் பூரணமாக அமைய வேண்டுமாயின் நபியவர்கள் ஏவிய கட்டளைகளை மனமுவந்து விரும்பி, அவர் தடுத்தவற்றை வெறுத்து, அவர்கள் கொண்டு வந்ததற்கு ஏற்ப தனது நேசத்தை ஆக்கிக்கொள்ளும் வரை ஒரு மனிதன் முழுமையான ஈமான் கொண்டவராக மாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் விளக்குகிறார்கள்.فوائد الحديث
இந்த ஹதீஸ் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முழுமையாக கட்டுப்படுவதை வலியுறுத்தும் ஒரு அடிப்படையை (விதியை) உள்ளடக்கியுள்ளது.
ஒரு முஸ்லிம் பகுத்தறிவு அல்லது வழக்காறை தீர்ப்புக்கான அடிப்படையாக எடுத்து அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கொண்டு வந்த வழிகாட்டலுக்கு மேலாக முன்னுரிமையளிப்பதை எச்சரித்தல். அவ்வாறு செய்பவர் ஈமான் அற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருத்தல்.
'லிமா ஜிஃத்து பிஹி' அதாவது 'நான் கொண்டுவந்ததற்கேட்ப' என்ற கூற்றானது எல்லா விடயங்களிலும் ஷரீஆவை –அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை- தீர்ப்பாகக்கொள்வது அவசியம் என்பதை காட்டுகிறது.
ஈமான் வணக்கத்தின் மூலம் அதிகரிக்கும், பாவத்தின் மூலம் குறைந்துவிடும்.
