إعدادات العرض
அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் அவனை சந்திப்பவர் சுவனம் நுழைவார். அவனுக்கு இணைவைத்த நிலையில் சந்தித்தவர்…
அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் அவனை சந்திப்பவர் சுவனம் நுழைவார். அவனுக்கு இணைவைத்த நிலையில் சந்தித்தவர் நரகில் நுழைவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் அவனை சந்திப்பவர் சுவனம் நுழைவார். அவனுக்கு இணைவைத்த நிலையில் சந்தித்தவர் நரகில் நுழைவார்".
الترجمة
عربي বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Türkçe اردو 中文 हिन्दी Tagalog ئۇيغۇرچە Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ Русский Deutsch 日本語 پښتو Tiếng Việt অসমীয়া Shqip Svenska cs ગુજરાતી አማርኛ Yorùbá Nederlands සිංහල ไทย دری bg ff hu it kn Кыргызча Lietuvių mg or ro rw Soomaali тоҷикӣ uz ak नेपाली mos az woالشرح
அல்லாஹ்வின் பரிபாலனக் கோட்பாடு, இறைமைக் கோட்பாடு, பெயர், பண்புகள் எதிலும் அவனுக்கு யாரையும் இணையாக்காத நிலையில் மரணிப்பவர் சுவனம் நுழைவார் என்றும், அவனுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தவரின் தங்குமிடம் நரகம் எனவும் நபியவர்கள் இந்நபிமொழியில் எமக்கு அறிவிக்கின்றார்கள்.فوائد الحديث
ஓரிறைக் கொள்கையுடன் மரணித்தவர் நரகில் நிரந்தரமாக்கப்பட மாட்டார், இறுதியில் சுவனம் நுழைவார்.
இணைவைப்பில் மரணித்தவருக்கு நரகம் உறுதியாகி விடுகின்றது.
சுவனம், நரகம் மனிதனுக்கு அருகிலேயே உள்ளன, அவனுக்கும் அவற்றுக்குமிடையில் மரணத்தைத் தவிர வேறு இடைவெளியில்லை.
இணைவைப்பில் வீழ்வதை அஞ்சுவது அவசியமாகும், ஏனெனில் நரகிலிருந்து விடுதலை பெற இணைவைப்பில் இருந்து விலகியிருப்பது நிபந்தனையாகும்.
அதிக நற்செயல்கள் கவனிக்கப்பட மாட்டாது, மாறாக இணைவைப்பிலிருந்து விலகியிருப்பதே கவனிக்கப்படும்.
லாஇலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தையின் அர்த்தம் இணைவைப்பை விட்டு விட்டு, வணக்கத்தில் அல்லாஹ்வை மாத்திரம் ஒருமைப்படுத்துவதாகும்.
இணைவைப்பிலிருந்து விலகியிருப்பதன் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவனம் மற்றும் நரகம் உண்டு என்பதை உறுதிப்படுத்தல்.
நற்செயல்களில் இறுதியை வைத்தே முடிவு கணிக்கப்படுகின்றது.