யார் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமை…

யார் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமை சிரமத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் சிரமத்தில் ஆழ்த்துவான்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸிர்மா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : யார் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமை சிரமத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் சிரமத்தில் ஆழ்த்துவான்.

[நம்பகமானது (ஹஸன்)] [இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்]

الشرح

முஸ்லிமுக்கு தீங்கை ஏற்படுத்துதல் அல்லது அவனது குடும்பம், சொத்து போன்ற ஏதாவது ஒரு விடயத்தில் சிரமத்தை ஏற்படுத்துதல் போன்றவனற்றை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே யார் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு செய்து, சிரமத்திற்குள்ளாக்குகின்றானோ அதைப்போன்ற தண்டனையை அல்லாஹ் தீங்கு செய்து சிரமப் படுத்தியவனுக்கு வழங்குகிறான்.

فوائد الحديث

முஸ்லிமுக்கு தீங்கை ஏற்படுத்தி சிரமத்தை ஏற்படுத்துதல் ஹராமாகும்.

பிறரால் பாதிக்கப்பட்ட தனது அடியார்களுக்குகாக அல்லாஹ் தண்டனை வழங்குகின்றமை.

التصنيفات

மார்க்க ரீதியான நட்புவைத்தல், பகைத்தல் ஆகியவற்றின் சட்டங்கள்