إعدادات العرض
1- சூனியத்தை எடுப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது அது ஷைத்தானின் செயலாகும் எனக் கூறினார்கள்.
2- சகுனம் பார்ப்பவனும், சகுனம் பார்க்கப் பட்டவனும், ஜோசியம் பார்த்தவனும், ஜோசியம் பார்த்துவிடப் பட்டவனும், சூனியம் செய்தவனும், யாருக்காக சூனியம் செய்யப்பட்டதோ அவனும் எம்மைச் சார்ந்தவனல்ல, யார் ஒரு ஜோசியனிடம் சென்று அவன் கூறுவதை உண்மைப் படுத்துகின்றானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை மறுத்தவனாவான்.
3- வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஒட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.