إعدادات العرض
1- 'சில மனிதர்கள் அல்லாஹ்வின் செல்வத்தை தான் விரும்பிய விதத்தில் அநியாயமான முறையில் கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்
2- “நிச்சயமாக இந்த உலகம் இனிமையும் பசுமையும் நிறைந்தவை. நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதை பார்ப்பதற்காக அல்லாஹ் உங்ளை இதில் பிரதிநிதியாக-முகவர்களாக- ஆக்கியுள்ளான். ஆகவே நீங்கள் உலகவிடயங்களில் மூழ்கிவிடுவதிலிருந்தும் மற்றும் பெண்கள் விடயங்களில் மதிமயங்கி விடுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருங்கள்
3- எல்லா சமூகத்திற்கும் ஒரு சோதனையுண்டு.எனது சமூகத்தின் சோதனை செல்வம்
4- இந்த உலகம் மூமீனுக்கு சிறைகூடமும்,காபிருக்கு சுவர்க்கலோகமுமாகும்
5- ஹகீமே! இந்தப் பொருள் பசுமையானது,இனிமையானது.எவன் அதனை யாசிக்காமல் அதனை ஒரு கொடையாளி தானாக விரும்பிக் கொடுக்கும் நிலையில் பெற்றுக் கொண்டானோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகும்.எவன் அதனை ஆசையுடன் அதனை எதிர்பார்த்த நிலையில் அதனை எடுத்துக் கொண்டானோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகாது.அவனின் நிலை உண்டும் வயிறு நிரம்பாதவன் போன்றதாகும்.இன்னும் மேல் கரம்,கீழ் கரத்தை விடவும் சிறந்ததாகும்.
6- அபூ உபைதா பஹ்ரெயினிலிருந்து கொண்டு வந்திருக்கும் பொருள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன்.
7- அல்லாஹ்வே! மறுவுலக வாழ்வையன்றி சொகுசான வாழ்வு வேறில்லை
8- அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலகமும் அதில் இருப்பவைகளும் சபிக்கப்பட்டவைகளாகும் ஆனால் அல்லாஹ்வைின் தியானத்தையும் அதனுடன் தொடர்புடைய விடயங்களையும்,மற்றும் அங்குள்ள அறிஞர்களையும் அறிவைத் தேடுகிறவர்களையும் தவிர.