ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்

ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்

4- என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்

9- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!

13- اللهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِي، أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ، وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ». (பொருள் : யா அல்லாஹ்! நான் உனக்குக் கட்டுப் பட்டு விட்டேன்! உன்னை விசுவாசம் கொண்டு விட்டேன். உன் மீதே பொறுப்புச் சாட்டுகின்றேன். உன்னிடமே மீளுகின்றேன். உன்னைக் கொண்டே தர்க்கிக்கின்றேன். யா அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை. என்னை நெறிபிரழச் செய்யாமல் இருக்குமாறு, உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு கேட்கின்றேன். மரணிக்காத நித்திய ஜீவன் நீயே! ஜின்களும் மனிதர்களும் மரணிப்பவர்களே! )