إعدادات العرض
1- இந்தக் குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் தப்பிவிடக் கூடியதாகும்.
2- அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர்.
3- உமது வீடுகளைக் கப்ருகளாக ஆக்கிவிடாதீர், ஷைத்தான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டிலிருந்து விரண்டோடுகின்றான்.
4- ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை ஓரிரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமாகும்.
5- அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும்.